சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'தில்லுக்கு துட்டு-2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காத்தாடி போல்' பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் தில்லுக்கு துட்டு-2. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காத்தாடி போல்' பாடலினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.


ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா, கருணாஸ், ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் என்பதால் இப்படதிதன் இரண்டாம் பாகத்தினை உருவாக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். அந்த வகையில் தற்போது இத்திரைப்படம் உருவாகி போஸ்ட் புரடக்ஷன் நிலையினை எட்டியுள்ளது.



சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' சில நாட்களே திரையில் மின்னிய நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த 'மன்னவன் வந்தானடி' படம் பைனான்ஸ் பிரச்சினையால் பாதியில் நின்றது. இதற்கிடையில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தானம் நடித்துள்ளார்.


'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தில் சந்தானம் ஜோடியாக மலையாள நடிகை ஷிர்தா சிவதாஸ் நடித்துள்ளார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'கலக்கப்போவது யாரு' ராமர் ஆகியோர் என பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஹேண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தினை சந்தானம் தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.