90ஸ் குழந்தைகளுக்கு பிடித்த கதாநாயகிகளுள் ஒருவர் கௌசல்யா. மாடல் துறையில் இருந்து நடிப்பு துறைக்கு வந்தவர். இவர், தென்னிந்திய படங்களிலேயே அதிகமாக நடித்துள்ளார். முன்னர் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது துணை நடிகை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயது ஆகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கௌசல்யா:


நடிகை கௌசல்யா, பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். மலையாளத்தில் வெளியான ஏப்ரல் 19 படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். அதையடுத்து தமிழ் திரையுலகம் இவரை அன்புக்கரம் கொண்டு ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படம் மூலம் வரவேற்றது. இந்த படத்தையடுத்து நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, வானத்தை போல என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். இன்றளவும் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 


இவர், தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் புடவை கட்டிக்கொண்டுதான் வருவார். புடவைக்கட்டும் பெண்களை “நல்ல குடும்பத்து பெண்” என்ற தொனியில் பார்க்கும் ஆண்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவர் சில அம்மன் படங்களிலும் நடித்துள்ளார். 


துணை கதாப்பாத்திரங்களுக்கு மாறிய நடிகை:


கௌசல்யா கடந்த சில ஆண்டுகளாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நட்பே துணை, 4 லெட்டர்ஸ், ராங் டீ, உத்ரா, ஹீரோ, ராதா கிருஷ்ணா போன்ற பல படங்களில் இவர் அம்மாவாகும் அக்காவாகவும் அன்னியாகவும் பல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனக்கு தற்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். 


கௌசல்யா அளித்திருந்த அந்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்திருந்தார். தனக்கும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு தொடர்பு இருக்கிறது என அப்போது கிசு கிசு எழுந்ததாக கூறினார். ஆனால், இது உண்மையல்ல என்பதை தெரிவித்தார். மேலும், திருமணம் என்பது மிகவும் அழகான விஷயம் என்றும் தனக்கு ஒருவருடன் திருமணம் வரை ஒரு உறவு சென்றதாகவும் கூறினார். ஆனால், அந்த உறவு முறிந்து போனதால் மனதளவில் அதிலிருந்து வெளிவர தனக்கு நேரம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அது மட்டுமன்றி உடலில் சில ஆரோக்கிய குரைபாடுகள் இருந்ததால் சில ஆண்டுகள் உடல் பருமனுடன் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ‘சூர்யா 43’ படத்தின் நாயகி இவரா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!


விஜய் குறித்து கௌசல்யா:


நடிகர் விஜய் குறித்தும் தனது நேர்காணலில் கௌசல்யா பேசியிருந்தார். அப்போது, விஜய்யுடன் பிரியமுடன் படத்தில் நடித்த பிறகுதான் பெரியளவில் தனக்கு மார்கெட் ஓபன் ஆனதாகவும் அப்போது தனக்கு விஜய் சாக்லெட் வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இருவரும் எப்போது பார்த்துக்கொண்டாலும் மிகவும் எளிமையாக பேசி பழகி கொள்வோம் என்றும் விஜய் குறித்து கூறினார். அவரை பிறர் மிகவும் அமைதியானவர் என்று கருதுவதாகவும் ஆனால் உண்மையில் ஜாலியாக அரட்டை அடிப்பவர் என்றும் பேசியுள்ளார். 


செலிப்ரிட்டி க்ரஷ்..


கெளசல்யா கலந்து கொண்ட நேர்காணலில் அவரது செலிப்ரிட்டி க்ரஷ் யாரென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தனக்கு எப்போதுமே விஜய் மற்றும் சூர்யா மீது செலிப்ரிட்டி க்ரஷ் இருப்பதாக தெரிவித்தார். 


மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் இவ்வளவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ