Keerthy Suresh:தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர், முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகள் ஆவார். தமிழில் இவர், ‘இது என்ன மாயம்’ படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்!


நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு, தமிழில் கடந்த 2015ஆம் ஆண்டு ‘இது என்ன மாயம்’  படம் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அமைதியான ஹீரோயினாக வந்த இவரை பலருக்கும் பிடித்திருந்தது. இதையடுத்து அவருக்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்தார். 


“உன் மேல ஒரு கண்ணு” பாட்டில் இவர் சிவகார்த்திகேயனை பார்த்து கண்ணடிக்க, ரசிகர்கள் அவர்களை பார்த்து கண்ணடித்தது போல ரசித்தனர். தொடர்ந்து, தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருந்தார். 


இதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். இவரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி விட்டது, மகாநதி படம்தான். இந்த படத்தில் அவர், மறைந்த நடிகை சாவித்ரியாக நடித்திருந்தார். இப்படம், பட்டிதாெட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷை பற்றி பேசியவர்கள், ‘மகாநதி கீர்த்தி’ என்று குறிப்பிடும் அளவிற்கு இருந்தது அவரது பர்ஃபாமென்ஸ். 


மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் மங்கை கீர்த்தி சுரேஷின் வைரல் க்ளிக்ஸ்!


முத்தக்காட்சியில் கீர்த்தி..


இந்திய திரையுலகில், முத்தக்காட்சிகள் மற்றும் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகள் அவ்வளவாக இடம் பெறாது. அது போன்ற காட்சிகளில் நடிக்க பல நடிகைகள் ஒத்துக்கொள்வதில்லை. அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தான் முத்தக்காட்சிகள் அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். 



பிரபல நடிகருக்கு நோ..


நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். தமிழில் விஜய், ரஜினி, விக்ரம், விஷால் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். அந்த வகையில் தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அப்படி தெலுங்கில் டாப் நடிகராக இருக்கும் நிதினுடன் சேர்ந்து நடிக்க இவருக்கு ஒரு பட வாய்ப்பு வந்ததாம். ஆனால், அந்த படத்தில் ஒரு முத்தக்காட்சி இடம் பெற்றிருந்ததாகவும் அதில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியதாகவும் பேசப்படுகிறது. 


சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ்:


நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது ‘சைரன்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், அவர் சிறப்பாக நடித்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பல முறை ஜெயம் ரவி தன்னுடன் படத்தில் நடிக்க மாட்டாயா என்று கேட்டதாகவும் அதன் பிறகுதான், இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


கீர்த்தி சுரேஷின் வரவிருக்கும் படங்கள்..


நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியுள்ளார். தமிழில் இவர், ரகுதாதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கயல்விழி என்ற இந்தி தெரியாத காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் ரிவால்வர் ரீடா என்ற படத்திலும் நடிக்கிறார். தொடர்ந்து, கண்ணிவெடி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தியில், பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிற்குள் அறிமுகமாக உள்ளார். 


மேலும் படிக்க | Siren Twitter Review: ‘சைரன்’ படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ