இராமாயண கதையை எப்போது படமாக எடுத்தாலும் அதை சளிக்காமல் பார்ப்பதற்கு இந்திய ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக, வட இந்தியாவில் இராமாயணத்திற்கு ராமனிற்கு மவுசு அதிகம். இந்த நிலையில், வரும் ஜூன் 16ஆம் தேதி இராமாயண கதையை மையமாக கொண்டு ஆதிபுருஷ் என்ற படம் வெளிவர இருக்கிறது. இதே போல எடுக்கப்பட உள்ள இன்னொரு இராமாயண கதையில் பல இந்திய பிரபலங்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னொரு இராமாயண கதை..


ஆதிபுருஷ் படமே இன்னும் வெளியாகத நிலையில் அதை போலவே இராமாயணக்கதையை எடுக்கப்பட உள்ள ஒரு படம் குறித்து இணையத்தில் சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன. அதன்படி, புதிதாக இராமாயணத்தை வைத்து ஒரு படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை பிரபல பாலிவுட் இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்குகிறாராம். இது, இவரது கனவுப்படம் என்றும் கூறப்படுகிறது. 


பல இந்திய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல்..


நிதேஷ் திவாரி இராமாயண கதையை இயக்க இருக்கிறார் என்ற செய்தி பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, இதில் நடிக்க உள்ள நடிகர்கள் யார் யார் என்ற தகவல்களும் பரவ தொடங்கின. பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ஜானகி கதாப்பாத்திரத்திலும் அவரது கனவரும் நடிகருமான ரன்பீர் கபூர் ராமனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!


இராவணன் யார் தெரியுமா?


மேற்கூறியது போல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில், இராவணனாக நடிக்க ஒரு பெரிய ஹீரோவிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். அவர் வேறுயாருமில்லை. கே.ஜி.எஃப் பட ஹீரோ ‘ராக்கி பாய்’யஷ்தான். இந்த படத்திலும் யஷ், நீண்ட தாடியுடனும் நீளமான முடியுடன் தோற்றமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இராமனாக மாற தயாராகும் ரன்பீர்..


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், முழுமையாக ராமனாக மாற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்து விட்டன. ரன்பீர் கபூர், கதை குறித்த விவாதங்களிலும் கதை அமைப்பது குறித்த பேச்சு வார்த்தையிலும் கலந்து கொண்டு வருகிறார் என ரசிகர்கள் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. மேலும், ராமன் போன்ற தோற்றமளிக்க ரன்பீர் கபூர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் உள்ளோர் தெரிவித்துள்ளனர். 


தீபாவளியன்று அறிவிப்பு..


தற்போது வரை ரன்பீர் கபூர் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதிசெய்யப்ப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆலியா பட்தான் சீதை என்ற முடிவிற்கே ரசிகர்கள் வந்துவிட்டனர். இப்போது யஷ்ஷிடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 15 நாட்களுக்குள் யஷ் இராவணனாக நடிக்கிறாரா இல்லையா என்பது தெரிந்து விடுமாம். 


மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ