தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தற்போது 6 க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ‘கனெக்ட்’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். கைவசம் உள்ள புரோஜெக்டுகளை முடித்த கையுடன், காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடிக்கும் முடிவில் இருக்கிறாராம் நயன்தாரா. ஏற்கனவே பலமுறை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவிய நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்தார் நயன்தாரா. அதேநேரத்தில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை ஒப்புக் கொண்ட அவர், திருமணம் செய்து கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மாநாடு படத்தின் 2 நாள் வசூல் விவரங்களை வெளியிட்ட தயாரிப்பாளர்!


அதனால், திருமணம் செய்து கொண்ட பிறகு சென்னையில் செட்டிலாக திட்டமிட்டுள்ள அவர், பிரபலமான ஏரியாவில் வீடு இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தேடியுள்ளார். போயஸ் தோட்டம் ஏரியா மீது அவருக்கு இருந்த தனிப்பட்ட பாசம் காரணமாக அந்த ஏரியாவிலேயே வீடு வாங்கும் முடிவில் இருந்திருக்கிறார். ஏனென்றால், அந்த ஏரியாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு இருக்கிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வசிக்கிறார். தனுஷூம் இப்போது அங்கு புதிய வீடு ஒன்றை பிரம்மாண்டமாக கட்டி வருகிறார். அந்த இடத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த நயன், புதிதாக கட்டப்பட்டு வரும் ப்ளாட்டை நேரில் சென்று பார்த்துள்ளார். தனக்கு பிடித்திருந்ததால் உடனடியாக, இரண்டு ப்ளாட்டுகளை புக் செய்து விட்டாராம்.



அவர் வாங்கியுள்ள ப்ளாட்டின் கட்டடப் பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. அந்தப் பணிகள் முடிந்தவுடன் வீட்டில் குடியேறும் நயன், அப்போது திருமணம் குறித்த தகவலை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, எழும்பூரில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார் அவர். புதிய வீட்டுக்கு சென்றபிறகு தனக்கு வேண்டியவர்களை அங்க தங்க வைக்கவும் முடிவெடுத்துள்ளாராம்.


அண்மையில், தனது 37 வது பிறந்தநாளை நயன்தாரா கொண்டாடினார். ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்பட செட்டில் காதலர் விக்னேஷ் சிவன் மிகப்பெரிய கேக் ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்து, நயன்தாராவை மகிழ்ச்சிப்படுத்தினார். அவரும் காதலரின் கேக்கை வெட்டி, படக்குழுவுடன் பிறந்நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த விழாவில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


ALSO READ பிரபாஸின் 'ராதே சியாம்' படத்தில் யுவன் சங்கர் ராஜா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR