Padayappa Movie THIS Actress Was The First Choice Before Soundarya: தமிழ் சினிமாவில் சமீப காலமாக பழைய-கிளாசிக் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. தகவல்கள் மட்டுமன்றி, அந்த படங்களே பல சமயங்கில் ரீ-ரிலீஸும் செய்யப்படுகின்றன. அந்த வகையில், ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற கிளாசிக் படங்களுள் ஒன்று, ‘படையப்பா’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை செளந்தர்யா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். இதில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க முன்னர் பேசப்பட்ட நடிகை வேறு ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகை யார்? அவர் இதற்கு முன்னர் ரஜினிகாந்துடன் எந்த படத்தில் நடித்திருக்கிறார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படையப்பா படத்தில் நடிக்க இருந்த நாயகி..


படையப்பா படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க காரணமாக இருந்தவர்களுள் ஒருவர், கதையின் நாயகி செளந்தர்யா. ரஜினியும் செளந்தர்யாவும் ஏற்கனவே அருணாச்சலம் படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். ஆனாலும், படையப்பா படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தேடுக்கப்பட்டது செளந்தர்யா இல்லை, நக்மாதான். 


ரஜினியுடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்து நடித்தவர்..


நடிகை நக்மா, 90ஸ் குழந்தைகளின் கனவுகண்ணியாக திகழ்ந்தவர்களுள் ஒருவர். 90களில் இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக பிரபு தேவாவுடன் இவர் சேர்ந்து நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இவர், நடிகர் ரஜினிகாந்துடன் ஏற்கனவே 1995ஆம் ஆண்டில் வெளியான ‘பாட்ஷா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களின் ஜோடி ரசிகர்களை கவர, படையப்பா படத்திலும் இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்தார்கள் போல. அதனால், இவரையே அப்படத்தில் நடிக்க வைக்கவும் ஆரம்பித்துள்ளனர். 


மேலும் படிக்க | வசூலில் அடிவாங்கிய லால் சலாம் படம்.. வெறும் இத்தனை கோடி தானா?


படப்பிடிப்பில் இருந்து விலகல்:


நடிகை நக்மா, படையப்பா படத்தின் ஆரம்ப நாட்கள் ஷூட்டிங்கின் போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் பாம்பு புற்றுக்குள் கைவிட்டு எடுக்கும் காட்சி நக்மாவை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு ஒரு சில காரணங்களினால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. இதையடுத்துதான், செளந்தர்யாவை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. 



நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க மறுத்த கதாநாயகிகள்..


படையப்பா படத்தில் கதாநாயகன்-கதாநாயகியின் உரையாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததோ இல்லையோ, வில்லி-கதாநாயகனின் டைலாக்குகள் இன்றளவும் பலரால் பஞ்ச் டைலாக்காக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், நீலாம்பரி கதாப்பாத்திரமும் அந்த கதாப்பாத்திரமாகவே நடித்த ரம்யா கிருஷ்ணனும்தான். ஆனால், இந்த கேரக்டரில் நடிக்க அப்போதைய டாப் கதாநாயகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கே.எஸ்.ரவிகுமார். 


நடிகை ஐஸ்வர்யா ராய், அப்போதுதான் தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருந்த நேரம். அவரை, படையப்பா படத்தில் வில்லியாக நடிக்க வைக்க சொல்லி ரஜினிகாந்த் கேட்டதாகவும் ஆனால் ஐஸ்வர்யா ராய் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, நடிகை மீனாவையும் நீலாம்பரியாக நடிக்க சொல்லி கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, தான் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதை மட்டுமே அனைவரும் விரும்புவதாகவும், அவருக்கு வில்லியாக நடித்தால் தனது மார்கெட் காலியாகிவிடும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்துதான் இந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றுள்ளது. 


மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிய ‘எதிர்நீச்சல்’ தொடர் நடிகை! ஆண் நண்பருடன் கைதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ