Latest News Ajith Kumar In KGF Universe : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், அஜித்குமார். தமிழைத்தவிர பிற இந்திய மொழிகளில் கேமியோ கதாப்பாத்திரங்களை தவிர வேறு எதிலும் நடித்திராத இவர், தற்போது ஒரு கன்னட படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கே.ஜி.எஃப் படத்தில் அஜித்குமார்! 


இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்த தென்னிந்திய திரைப்படங்களுள் ஒன்று, கே.ஜி.எஃப். 2018ஆம் ஆண்டில் இப்படத்தின் முதல் பாகமான KGF-Chapter 1 வெளியானது. இதில், யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். கடத்தல் மன்னனான ராக்கியின் பலத்தையும், அவன் வாழ்ந்த விதத்தை விளக்குவது போலவும் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தையும் பிரசாந்த நீல்தான் இயக்கியிருந்தார். 


தற்போது, தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் கதாநாயகர்களுள் ஒருவர் அஜித்குமார். இவர், கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித், பிரசாந்த் நீலை சந்தித்ததாகவும், இருவரும் கதை குறித்து விவாதித்தாகவும் கூறப்படுகிறது. முடிவில், இரண்டு படங்களில் நடிக்க அஜித்குமார் சம்மதம் தெரிவித்ததாகவும், இதில் ஒன்று தனியான கதை கொண்ட படம் என்றும், இரண்டாவதுதான் கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தின் கதை என்றும் பேசப்படுகிறது. மேலும், இவ்விறு படங்களையும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.கே.ஜி.எஃப் மூன்றாவது பாகத்தில் ராக்கி பாயான யாஷ் முதல் ஹீரோவாகவும், அஜித் இரண்டாவது ஹீரோவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..


முதல் முறையாக வேறு மொழி இயக்குநருடன் அஜித்!


நடிகர் அஜித், கடந்த சில ஆண்டுகளாக தனக்கு செட் ஆன இயக்குநர்களுடனேயே படங்களில் இணைந்து பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில்தான் மகிழ் திருமேனி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியாேரின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக கன்னட மொழி இயக்குநரான இவருடன் அஜித் கைக்காேர்த்திருப்பது, திரை உலகின் எட்டுத்திக்கில் இருந்தும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. 


ஷூட்டிங்கில் ஒரே பிசி..!


நடிகர் அஜித், துணிவு படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இடையில் ஷூட்டிங் தடைப்பட்டு பாேக, படத்தின் பிற வேலைகளும் தாமதமாகவே நடைப்பெற்றது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதில் அவர், அஜித்திற்கு மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜானில் சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பில்தான் த்ரிஷா கலந்து கொண்டார். இதையடுத்து, அஜித் நடிக்கும் இன்னொரு படமான ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் தொடங்கியது. ஹைதராபாத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படம், இந்த வருடத்தில் வெளியாக, குட் பேட் அக்லி அடுத்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அஜித்தின் 64வது படத்தை இயக்கப்போவது யார்? போட்டியில் 3 பெரிய இயக்குநர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ