Latest News Suriya 44 Cameo Actress : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர், நடிகர் சூர்யா. இவர், தற்போது தனது 44வது படத்தில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேமியோ கதாப்பாத்திரங்களில் சூர்யா..


நடிகர் சூர்யா, காேலிவுட்டின் முக்கிய நடிகராக வலம் வந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்காமல் இருக்கிறார். இவர் நடிக்கும் பிற படங்கள், கேமியோ கதாப்பாத்திரங்களை உள்ளடக்கியவைகளாக இருக்கின்றன. விக்ரம் படத்தில் ஆரம்பித்து, ராக்கெட்டரி, சர்ஃபிரா என பிற மொழி படங்களிலும் கெளரவ தாேற்றங்களிலேய நடித்து வருகிறார். 


சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. சரித்திர கதையாகவும், ஃபேண்டசி ஃபிக்ஷன் கதையாகவும் இது உருவாகி வருகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து பாபி டியோல், திஷா பதானி உள்ளிட்டாேர் நடிக்கின்றனர். கூடவே, நடிகர் கார்த்திக்கும் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 


சூர்யா 44:


நடிகர் சூர்யா, கங்குவா படத்தை அடுத்து கமிட் ஆன படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார், இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை அனைவரும் ‘சூர்யா 44’ என்று அழைத்து வருகின்றனர். இதில், கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம், வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் கேங்க்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஸ்டோன்பென்ஞ் நிறுவனம் மற்றும் 2 டி எண்டெர்டெயின்மண்ட் ஆகிய நிறுவனங்கள் த்யாரிக்கின்றன. சூர்யாவுடன் சேர்ந்து ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் இன்னொரு ஆளாக இணைந்திருக்கிறார் 41 வயது பிரபல நடிகை. 


மேலும் படிக்க | ‘சூர்யா 44’ படப்பிடிப்பு எங்கு? வீடியோ வெளியிட்ட படக்குழு!


யார் அந்த பிரபல நடிகை? 


10-15 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். ரஜினி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்திருந்தார். 



கடந்த 7 வருடங்களாக ஸ்ரேயா இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் இவர் இந்தியில் நடித்த ‘த்ரிஷ்யம்’ படம் நல்ல ஹிட் அடித்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகைகளுள் ஒருவரான இவர், தமிழில் மட்டும் நடிக்காமல் இருந்தார். தற்போது 7 வருடங்கள் கழித்து தமிழ் திரையுலகிற்குள் சூர்யா 44 படம் மூலம் எண்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். 


தமிழில் நடிக்க வராததற்கு காரணம் என்ன? 


நடிகை ஸ்ரேயா, தென்னிந்திய படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் மொழியில் மட்டும் நடிக்காமல் இருந்தார். அவர், தமிழ் திரையுலகில் நடித்துக்கொண்டிருந்த போது ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணமே இவர்தான் என்றும் ‘ராசியில்லாத கதாநாயகி’ என்றும் முத்திரை குத்தினர். இதையடுத்து, சில வருடங்களுக்கு முன்பு இதயம் புண்பட்டு தமிழ் சினிமாவில் இருந்து அவர் விலகியதாகவும் இதனால்தான் கோலிவுட் பக்கமே வரவில்லை என்றும் சிலர் கூறினர். இருப்பினும் இதுவரை ஸ்ரேயா இதுவரை எதுவும் வாய் திறந்து கூறவில்லை. 


மேலும் படிக்க | Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ