Bigg Boss 8 Tamil Eviction This Week : விஜய் சேதுபதி, புதிய தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்தும், இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆவப்போவது யார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8:


ஆங்கிலத்தில் ‘பிக் பிரதர்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் தொடங்கியது. முதலில் இந்தியில் ஆரம்பிக்கப்பட் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து, 2017ஆம் ஆண்டு தமிழில் முதன்முறையாக இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதை முதலில் தொகுத்து வழங்க ஆரம்பித்தவர் நடிகர் கமல்ஹாசன். 


கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களுக்கு தாெகுப்பாளராக இருந்தார். திடீரென இந்நிகழ்ச்சியை இனி தன்னால் தொகுத்து வழங்க முடியாது என்று அறிவித்தார்.அதிக படங்களில் கமிட் ஆனதாலும், ஏஐ குறித்து மேற்கொண்டு படிக்க இருப்பதாலும் இதில் இருந்து கமல் விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து புது தொகுப்பாளராக மாறியவர் விஜய் சேதுபதி. எப்படி இவர் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யப்போகிறாரோ என்று ரசிகர்கள் புலம்ப, முதல் எபிசோடிகளிலேயே அனைத்து பால்களையும் சிக்ஸர்களாக மாற்றினார். இதையடுத்து மக்கள் எதிர்பார்த்த பல்வேறு நபர்கள் இதில் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கினர். 


முதல் எவிக்ஷன்..


பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒரு போட்டியாளர் எவிகட் செய்யப்பட்டார். அவர்தான், சாச்சனா நமிதாஸ். விஜய் சேதுபதிக்கு மகளாக, மகாராஜா படத்தில் நடித்த இவர், முக்கிய போட்டியாளராக இந்த நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். ஆனால், போட்டியில் ஒரு நாள் கூட நிலைக்காத இவர் முதல் ஆளாக எவிக்ட் செய்யப்பட்டது பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், இன்றைய எபிசோடில் இவர் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் கண்டிப்பாக ஒரு பெண்தான்! ஏன் தெரியுமா?


இந்த வார எவிக்ஷன்..


பிக்பாஸ் 8 ஆரம்பித்த முதல் நாளிலேயே போட்டி பரபரக்க ஆரம்பித்து விட்டது. ரஞ்சித், ரவீந்திரன், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் கவனம் ஈர்த்து வந்தனர். ஒரு சிலர், கண்டண்ட் கொடுக்காத போட்டியாளர்களாக இருக்கின்றனர். தற்போது இந்த வாரத்தில் மக்களின் வாக்குகளை குறைவாக பெற்றிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 



பிக்பாஸ் நிகழ்ச்சியில்  இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றிருப்பவர்கள் ஜாக்குலின் மற்றும் அருண் பிரசாத் என்று கூறப்படுகிறது. இவருவரும் ஏதேதோ செய்து பிறரின் கவனத்தை ஈர்க்க முயன்றாலும் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்


மேலும் படிக்க | விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ