Vadivelu Helps Vengal Rao : தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் அளவிற்கான செல்வாக்கு, துணை நடிகர்களுக்கு இருப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவில் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டி வருவதால் பல சமயங்களில் ஏழ்மை நிலையில் வாடுகின்றனர். மருத்துவ கோளாறுகளால் பாதிக்கப்படும் இவர்கள் மருத்துவமனையில் கூட அனுமதிக்கப்படாத அளவிற்கு நிதி எதுவும் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். ஒரு சிலர் வீடு வாசல் என்று கூட வாழ்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சினிமா துணை நடிகர் ஒருவர் வெளியிட்டிருந்து வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ: 


நடிகர் வெங்கால் ராவ் இதுவரை தமிழ் திரைப்படங்களில் பலவற்றில் முகம் காட்டியிருக்கிறார். குறிப்பாக வடிவேலு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளில் இவரை அதிகமாக பார்க்கலாம். விஜயகாந்தின் படம் மூலம் சண்டை கலைஞராக அறிமுகமான இவர், தொடர்ந்து அடிதடி ஆட்கள் கதாபாத்திரத்தில் நடித்தார். தலைநகரம் படத்தில் வரும் ‘கொரில்லா செல்’காமெடியை சொன்னால் இவர் நினைவுக்கு வருவார். தலையில் முட்டையுடன் இவர் வடிவேலுவுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசம் பலரை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.. வடிவேல் உடன் கந்தசாமி படத்தில் “அஞ்சு ரூபாய் ஆறு ரூபாய்” என்று இவர் தேங்காய்க்கு பேரம் பேசும் காட்சி பலரை சிரிக்க வைத்திருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக வடிவேலு உடன் பல படங்களில் நடித்த இவர், சமீபகாலமாக திரையுலகில் இருந்து விலகி இருந்தார். இவரைப்போல பல்வேறு காமெடியன்கள் புதிதாக தமிழ் திரை உலகில் தோன்றி விட்டதால் இவரை ரசிகர்கள் மறந்து போயினர். பட வாய்ப்புகளை இழந்ததால் இவர் தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்றதாக கூறப்பட்டது. 


இந்த நிலையில் தான் இவர் பேசும் வீடியோ ஒன்று வரலானது. அதில் தனக்கு கை கால்கள் செயலிழந்து விட்டதாகவும், பேச முடியவில்லை என்றும், திரைத்துறையில் இருப்பவர்கள் உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். இதை எடுத்து உடனே சில பிரபலங்கள் நிதி உதவி செய்தனர். 


மேலும் படிக்க | Archana Ravichandran : பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?


வடிவேலு உதவி: 


கோலிவுட் உலகின் காமெடி ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவர் வடிவேலு. இவருக்கு திரைக்கு முன்னர் இருக்கும் நல்ல பெயர், படத்தை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்ததில்லை. இவர் குறித்து பேசும் பல துணை நடிகர்கள் நல்லவிதமாக எந்த நேர்காணலில் கூறியதில்லை. இதனால் இவர் மீது ரசிகர்கள் பலருக்கு தவறான பிம்பம் இருந்தது. இதனால் அவர் வெங்கால் ராவிற்கு உதவி செய்ய மாட்டார் என்று கூறப்பட்டது.  இதை அடுத்து அவர் தற்போது செய்துள்ள செயல் பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.


வெங்கால் ராவ் உடன் வடிவேலு செல்போன் மூலம் உரையாடியதாகவும், அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வெளியியில் சொல்லப்படாத தொகையை அவர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பண உதவி குறித்து தகவல் எதுவும் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. 


வெங்கால் ராவிற்கு உதவிய  பிரபலங்கள்: 


நடிகர் சிம்பு முதல் ஆளாக வெங்கால் ராவிற்கு உதவினார். மொத்தம் இரண்டு லட்ச ரூபாயை இவர் அவருக்கு வழங்கியதாக கூறப்பட்டது. அதேபோல பலருக்கு உதவி செய்து பிரபலமாகி வரும் ‘கலக்கப்போவது யாரு’ பாலாவும் பெங்கால் ராமிற்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார். இவர்களைப் போலவே தமிழ் திரையுலக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவருக்கு 25 ஆயிரம் ரூபாயை வழங்கி உதவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் இன்னொரு பெரிய படம்! எது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ