Atlee Movie With Rajinikanth : தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து, இப்போது இந்தியாவின் டாப் டைரக்டராக வளர்ந்து நிற்பவர் அட்லீ. இவர் தற்போது இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான்-இந்திய இயக்குநராக வளர்ந்த அட்லீ!


இயக்குநர் அட்லீ, இதுவரை தமிழில் 4 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அதிலும், தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய 3 படங்களும் விஜய் நடித்தது. அவர் முதன் முதலாக இயக்கி இருந்த ராஜா ராணி படமும் பெரிய ஹிட் அடித்தது. இவரது படங்கள், விமர்சனங்கள் மூலமாக அடி வாங்கினாலும் பாக்ஸ் ஆபிஸில் கில்லி பாேல நின்று பேசுகின்றன. தமிழில் விஜய்யை வைத்தே காலத்தை ஓட்டிய இவர், அடுத்து குறி வைத்தது பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானிற்குதான். 


ஷாருக்கானை ஹீராேவாக நடிக்க வைத்து அட்லீ இயக்கியிருந்த படம், ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம், குடும்ப டிராமாவாகவும், ஆக்ஷன் டிராமாவாகவும் இருந்ததால் இதற்கு பாலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஜவான் பட ரிலீஸை அடுத்து, பான் இந்திய நடிகராக மாறினார் அட்லீ. அடுத்து அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தார். 


அல்லு அர்ஜுன் படம் டிராப்..


தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகராகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் விளங்குபவர், அல்லு அர்ஜுன். ஜவான் படத்தை இயக்கி முடித்தவுடன், அல்லு அர்ஜுனிடம் கதை கூறினார் அட்லீ. இந்த கதை பிடித்துப்போக தொடர்ந்து கதையின் விவாதம் குறித்த பணிகள் நடைப்பெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த படத்தை, ஒரு பெரிய தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அட்லீ செய்த ஒரு வேலையால், இந்த படம் டிராப்பாகி விட்டதாக கூறப்படுகிறது. ஜவான் படம் மூலம் தனது மார்கெட் உயர்ந்ததால், தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தியிருக்கிறார் அட்லீ. ஜவான் படத்திற்காக சுமார் ரூ.60 கோடியை சம்பளமாக பெற்ற அவர், அல்லு அர்ஜுனின் படத்திற்காக 80 கோடியை சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மறுத்ததால் இப்படத்தின் பணிகள் டிராப்பாகி விட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | அல்லு அர்ஜுனுக்கு பதில் ‘அந்த’ ஹீரோ! மாஸ் ப்ளான் போட்ட அட்லீ! யார் அந்த நாயகன்?


அதே கதை..வேற ஹீரோ!


அல்லு அர்ஜுனை தனது கதையில் நடிக்க வைக்க முடியாமல் பாேனதால், அதே கதையில் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம், அட்லீ. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை, பாலிவுட்டின் இன்னொரு பெரிய ஹீரோ, சல்மான்கான்தான் என தகவல் வெளியாகியிருக்கிறது. திருமணம் ஆகாத பேச்சுலர் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சல்மான் கானிற்கு தற்போது 58 வயதாகிறது. இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடிப்பதாக கூறப்படுகிறது. 



இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


விஜய் வழியில் ரஜினி?


நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர்களுடன் கைக்கோர்த்து வருகிறார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனுடன் ஜெயிலர் படத்திலும், மாஸ்டர்-லியோ உள்ளிட்ட படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்திலும் கைக்காேர்த்திருக்கிறார் ரஜினி. தற்போது அட்லீயுடனும் கைக்காேர்த்திருப்பது, “ஒரு வேளை விஜய் ரூட்டை ரஜினி பின் தொடர்கிறாரோ..?” என்று ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. 


மேலும் படிக்க | Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ