Latest News Shalini Ajith Kumar In Hospital : திருமணத்திற்கு பின்பு நடிப்பதை நிறுத்திய ஷாலினி, அதன் பிறகு தனது குடும்பத்தை பராமறித்து வருகிறார். இவரும், அஜித்குமாரும் மருத்துவமனை படுக்கையில் கைக்கோர்த்து அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாலினிக்கு என்ன ஆச்சு?


நடிகை ஷாலினி, 2000ஆம் ஆண்டில் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரையுலகில் இருந்து மொத்தமாக விலகிவிட்டார். சினிமா பக்கமே வராமல் இருந்த அவர், தன் கணவர் போலவே எந்த பத்திரிகை ஊடகங்களுக்கும் கூட பேட்டி கொடுப்பதில்லை. இந்த நிலையில்தான் தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 



ஷாலினி, தனது சமூக வலைதள பக்கத்தில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொடுக்கும் ஆடையை அணிந்து கொண்டு, தனது கணவர் அஜித்தின் கைக்கோர்த்து அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜர்பைஜான் நாட்டில் பிசியாக இருந்த அஜித், நேற்று அவசரமாக சென்னைக்கு வந்தார். அப்போது அவர் ஒரு அவசர வேலையாக சென்னைக்கு திரும்பி விட்டதாக கூறப்பட்டது. இறுதியில், ஷாலினிக்கு ஒரு முக்கிய அறுவை சிகிச்சை நேற்று நடைப்பெற்றதாகவும் தன் மனைவியை பார்க்கதான் அவர் ஓடோடி நேற்று சென்னைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஷாலினி, தனது பதிவில் “Love You Forever" என்ற கேப்ஷனுடன் இந்த பதிவினை வெளியிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | Ajith Kumar : வாழத்தெரிந்த மனிதர் அஜித்! சமையலும் செய்வார்..பைக் டூரும் செல்வார்..வைரல் போட்டோக்கள்!


விடாமுயற்சி படப்பிடிப்பு:


அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம், விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இடையில் தாமதம் ஆனதால், தனது ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க கமிட் ஆனார் அஜித். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைப்பெற்றது. சில நாட்களுக்குள்ளாகவே அஜித் குறித்த காட்சிகள் விரைவில் முடிக்கப்பட்டன. சண்டை காட்சிகள் உள்பட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிள் கலந்து கொள்ள ஆயத்தமானார் அஜித். அஜர்பைஜானில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர், சில நாட்களிலேயே சென்னைக்கு திரும்பினார். அவரது பங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன்தான் இவர் சென்னை திரும்பினார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது மனைவியை பார்ப்பதற்காகத்தான் அவர் சென்னைக்கு திரும்ப வந்திருக்கிறார். 


மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, அஜித் அஜர்பைஜான் படப்பிடிப்பில் பதற்றத்துடன் காணப்பட்டதாகவும் அவ்வப்போது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. 


அழகான காதல் கதை!


அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கின் போது ஒன்றாக பணிபுரிந்த அஜித்-ஷாலினி, காதலில் விழுந்தனர். படம் வெளிவந்த அடுத்த வருடமே திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள முடிவு செய்த ஷாலினி அப்படியே திரையுலகை விட்டு விலகவும் செய்தார். அதோடு எந்த படங்களிலும் கௌரவ கதாப்பாத்திரத்திலும் கூட அவர் நடித்ததில்லை. அஜித்-ஷாலினிக்கு அனௌஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் அதே இளமை மாறா காதலுடன் இருவரும் இருப்பதும், ஒருவர் மீது ஒருவர் அதிக அக்கறை செலுத்துவதும் அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சியுற செய்திருக்கிறது. 


மேலும் படிக்க | விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்! அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ