Priyanka Manimegalai Fight : தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஷோக்களில் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் முடிவு பெறும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் நடைப்பெற்ற சலசலப்பு குறித்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குக் வித் கோமாளி சீசன் 5:


தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்களை மகிழ்விக்கும் ஷோவாக இருக்கிறது, குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை அடைந்திருக்கிறது. இதில், முந்தைய சீசன்களில் இருந்தது போல அல்லாமல் எக்கச்சக்கமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலக, அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் சேர்ந்து கொண்டார். பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், பூஜா, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். ரக்ஷனுடன், புதிய தொகுப்பாளராக மணிமேகலை நுழைந்தார். 


மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை..


கடந்த 3 நாட்களாக சமூக வலைதளங்களில் தீயாக பேசப்பட்டு வருவது, பிரியங்கா-மணிமேகலை குறித்த செய்திதான். கடைசியாக ஷூட் செய்யப்பட்ட எபிசோடின் போது, ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக தனது சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது குறித்த வீடியோவை பகிர்ந்த அவர், ஷோவில் குக்-ஆக வந்த தொகுப்பாளர் ஒருவர், அவர் வேலையை மட்டும் பார்க்காமல் பிறர் வேலையையும் சேர்த்து பார்ப்பதாகவும், அவரது கைகளே ஷோவில் ஓங்கி இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அந்த தொகுப்பாளர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அது பிரியங்காதான் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது.


மேலும் படிக்க | Priyanka Deshpande : பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணமா!? மாப்பிள்ளை இவர்தான்!


தன் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என்று கூறிய மணிமேகலை, தான் இனி இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போவதில்லை என்று கூறினார். கூடவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை புதிதாக தயாரிக்கும் நிறுவனம் மிகவும் Unprofessional-ஆக நடந்து கொண்டதாகவும் கூறினார். மணிமேகை பேசிய இந்த பிரச்சனை பெரும் புயலாக மாறியது. கடந்த சில நாட்களாக பிரியங்கா மீது வெறுப்பு மழையை பொழிந்து, பலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


தப்பு யார் பக்கம்? போட்டுடைத்த பிரபலம்..


மணிமேகலை vs பிரியங்கா பிரச்சனையில் பலர் மணிமேகலைக்கு ஆதரவாக நின்றாலும், ஒரு சிலர் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் பிரபலமான ஆர்.ஜே.ஷா ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 



இந்த பிரச்சனை குறித்து தான் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசியதாக கூறும் ஷா, அவர்கள் கூறிய தகவல்களை ஒரு வீடியோவில் பகிர்ந்திருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து மணிமேகலையிடம் பிரியங்கா கிட்ட பேச மாட்டீங்க..ஆனா ஷோ பண்ண போறீங்க..” என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு மணிமேகலை, “நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் அவங்கி கிட்ட பேச மாட்டேன்” என கூறியிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 


மேலும், இந்த சீசன் முடியும் வரை வீஜே வாக இருந்து, அனைவரிடத்திலும் நன்றாக பழக வேண்டும் என்பது உங்களுடைய வேலை. அதை நீங்கள் செய்ய மாட்டேன் என்ரு கூறினால், தாராளமாக வெளியே செல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர். மொத்தத்தில், மணிமேகலை தாமாக முன்வந்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனம்தான் அவரை வெளியேற்றி இருப்பதாகவும் ஷா கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க | பிரியங்கா vs மணிமேகலை பிரச்சனை.. சண்டை போட்ட ஆடியோ லீக்! நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ