ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களுள் ஒன்று, மாரி. தெய்வத்தின அருள் கிடைத்த ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதைதான் இது. பல எதிர்பார்க்காத திருப்பங்களோடும் கொஞ்சம் காதல் காட்சிகளோடும் மாரி சீரியல் பல குடும்பத்தாரின் மனங்களில் இடத்தை பிடித்துள்ளது. பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடர் குறித்த இன்றைய எபிசோட் அப்டேட்டில் தெரிந்து கொள்வோம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய எபிசோட்:


மாரி சீரியலின் முந்தைய எபிசோடில் முத்துப்பேச்சி மாரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறார். மறுநாள் மாரி மற்றும் சூர்யா முத்துப்பேச்சி வீட்டிற்கு பைக்கில் செல்கின்றனர். அப்படி இருவரும் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேச்சி அம்மன் கோவில் அருகே பைக் ஆஃப் ஆகி நிற்கிறது.



மாரி கையில் வைத்திருந்த ஒரு முக்கியமான டாக்குமெண்ட் பேப்பர் பறந்து சென்று கோவிலுக்குள் விழுகிறது. இந்த பேப்பரை எடுப்பதற்காக சூர்யா கோவிலின் கதவை உடைக்க மாரி கோவில் இப்படி பூட்டி இருக்க கூடாது என கோவில் முழுவதையும் சுத்தம் செய்து பக்கத்தில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டு வந்து மாலையாக தொடுத்து அம்மனுக்கு போட்டு பூஜை செய்கிறாள். 
இந்த விஷயத்தை முத்துப்பேச்சியிடமும் கூறுகிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் நடக்கவிருப்பது என்ன? 


இன்றைய எபிசோட்:


மாரி சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து பேச்சி வீட்டுக்கு வந்த மாரி பூ எடுத்துக் கொடுத்து வரும்போது வழியில் நடந்த விஷயங்களை சொல்ல சண்முகமும் முத்துப்பேச்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். 


அதன் பிறகு முத்துப்பேச்சு இருவரையும் உட்கார வைத்து தனது கையால் பரிமாறிவிட்டு தான் பஞ்சாயத்துக்கு சென்று வருவதாக சொல்ல மாரியும் சூர்யாவும் நாங்களும் உங்களோடு வருகிறோம் என சொல்லி கிளம்புகின்றனர். 


மேலும் படிக்க | Veerapandiya Kattabomman: “வரி வட்டி கிஸ்தி..” 64 ஆண்டுகளை கடந்தும் அழியாத காவியமாய் வீரபாண்டிய கட்டபொம்மன்!


கோவில் திறந்த விஷயம் சார்பாக சர்க்கரை கலெக்டர் தலைமையில் பஞ்சாயத்தை கூட்டி முத்து பேச்சி கூட்டு களவாணித்தனம் பண்ணி இருக்கா, அவ தான் ஆள வச்சு கோவிலை திறந்து இருக்கா என சத்தம் போட்டுக் கொண்டிருக்க அப்போது முத்துப்பேச்சி, மாரி மற்றும் சூர்யா என மூவரும் வந்து இறங்குகின்றனர். 


சக்கரை முத்துப்பேச்சியை அவமானப்படுத்தி பேச சூர்யா கோவில் பூட்டை நான் தான் உடைத்தேன் என சொல்ல மாரி நடந்த விஷயங்களை சொல்கிறாள். இவ சொல்வதெல்லாம் பொய் என சக்கரை பேசிக் கொண்டிருக்க அந்த சமயம் சக்கரையின் மனைவிக்கு சாமி வந்து நான் தான் கோவிலை திறக்க வைத்தேன், எனக்கு பூஜை பண்ணுங்க என சொல்ல ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷமடைகின்றனர். 



முத்துப்பேச்சு இதை யார் சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருக்க மாட்டேன் என்னை எதிர்த்து பேசியவரோட மனைவி மூலமாகவே சாமி வந்து சொல்லி இருக்கு என்று கலெக்டரிடம் எடுத்து பேசி கோவிலை எப்போதும் திறந்தே இருக்க வழி செய்கிறாள். 


பிறகு ஊர் மக்கள் எல்லோரும் முத்துபேச்சி வாழ்க என கோஷம் போட முத்து பேச்சி மாரிக்கு நன்றி சொல்கிறார். அது மட்டுமல்லாமல் நேராக பேச்சியம்மன் கோவிலுக்கு சென்று இனிமே உனக்கு மூன்று வேலையும் நான் பூஜை செய்வேன். மாரியும் சூர்யாவும் உன்னுடைய குழந்தைங்க, அவங்க எப்போதும் சந்தோஷமாக இருக்கணும் என வேண்டுகிறாள். 


காணத்தவறாதீர்கள்..


பஞ்சாயத்தில் நடந்த விஷயங்களை பார்த்து சகுந்தலா மற்றும் ஸ்ரீஜா இருவரும் கடுப்பாகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Jigarthanda Doube X: ஜிகிர்தண்டா 2 ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்..படு குஷியில் ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ