தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.


இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் சொன்னது போல ஸ்ரீஜா மற்றும் சங்கரபாண்டி இருவரும் சேர்ந்து துர்கா கையில் இருந்த காப்பை அகற்றி விடுகின்றனர். இதனால் ஜாஸ்மின் துர்காவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அவள் மூலம் லட்டுவை சூர்யாவுக்கு கொடுக்க வைக்க சூர்யா குழந்தை கொடுப்பதால் வாங்கி சாப்பிட்டு விடுகிறான்.



கல்யாண ஏற்பாடுகள்


அதன் பிறகு இரவில் எல்லோரும் தூங்கியதும் ஜாஸ்மின் சூர்யா மற்றும் துர்காவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை எழுப்பி தனது அருகே வர வைக்கிறாள். பிறகு இருவரையும் ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவளது ஆண்டவரை பார்க்க வருகிறாள்.



அங்கே ஜாஸ்மினின் குருஜி ஏற்கனவே கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்க இருவரையும் மணமேடையில் உட்கார சொல்கிறார். இருவரும் உட்கார்ந்த பிறகு மாலை மாற்றிக்கொள்ளுமாறு சொல்ல இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். மேலும் பிரம்ம முகூர்த்தம் வந்ததும் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.


அதிர்ச்சியில் மாரி


மறுபக்கம் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் மாரி திடீரென எழுந்து பார்க்க பக்கத்தில் சூர்யா மற்றும் துர்கா இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். வீடு முழுவதும் அவர்களை தேடி வர ஒரு இடத்தில் துர்காவின் காப்பு கழண்டு கிடப்பதை பார்த்து ஏதோ பெரிய பிரச்சனை என்பதை புரிந்து கொள்கிறாள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: கதிரை தேடி அலையும் கார்த்தி, தீபாவுக்கு செக் வைத்த ஐஸ்வர்யா


பிறகு தேவி அம்மாவை உதவிக்கு கூப்பிட ஏற்கனவே சாமியார் தேவியம்மா மற்றும் மாடத்தி அம்மனுக்கு கட்டு போட்டு விட்டதால் தேவி அம்மாவால் வீட்டுக்குள் வர முடியவில்லை. பிறகு மாரி மாடத்தி அம்மனிடம் வேண்ட மாடத்தி அம்மனும் வரவில்லை.


 


வழி காட்டிய பாம்பு


இதனால் மாரி வெளியே ஓடிவந்து ஹஸ்பண்டு சார் என கத்திக் கொண்டே சூர்யாவை தேட, ஒரு இடத்தில் புற்று இருப்பதை பார்த்து அங்கு சென்று வேண்டுகிறாள்.  அப்போது புற்றிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து மாரியை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி பாம்பு நகர்ந்து செல்கிறது.


காணத்தவறாதீர்கள்


மாரியும் பாம்பை பின்தொடர்ந்து நடந்து செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மாரி: சீரியலை எங்கு பார்ப்பது?


மாரி சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | பழனியை எதிர்த்து போட்டியிடும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ