Maari Zee Tamil TV Serial Today Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர், மாரி. இந்த சீரியலின்  நேற்றைய எபிசோடில் சூர்யா தூக்கில் தொங்குவது போல நாடகமாடி மரியாவை மிரள வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்ற அப்டேட் இப்போது வெளியாகி இருக்கிறது. அதனை இங்கு காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யா, மாரியின் பிளான் இதுதான்...


அதாவது எல்லாரும் மரியாவின் பேச்சை கேட்டு ஓடி வந்து பார்க்க அங்கு யாரும் இல்லாமல் இருக்க மரியா அதிர்ச்சி அடைகிறாள். தாரா மரியாவை கூப்பிட்டு, 'உனக்கு என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க' என்று கேட்க 'இல்ல சூர்யா அங்க தூக்குல தொங்கிட்டு இருந்தான்' என்று சொல்ல, 'சொத்து நம்ம கைக்கு வர வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இரு' என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். 


மரியா திரும்பவும் ரூமுக்கு வர, சூர்யா தூக்கில் தொங்க மீண்டும் மரியா எல்லாரையும் கூப்பிட எல்லாரும் வந்து பார்க்கும் போது அங்கு யாரும் இல்லை. உடனே மரியா நான் உண்மையை தான் சொல்றேன். நீங்க வேணா சூர்யாவுக்கு வீடியோ கால் பண்ணுங்க அப்போ உண்மை தெரிந்து விடும் என்று சொல்ல வீடியோகால் செய்ய அவன் வீட்டில் இருக்க மரியா ஷாக் ஆகிறாள்.


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: கச்சேரியில் பாடி முடித்ததும் தீபாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு‌, நெரிசலில் சிக்கிய அபிராமி


சந்தேகப்படும் தாரா...


பிறகு நைட் நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது அவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க ரூமில் தண்ணீர் இல்லாததால் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுக்க வர ஏதோ ஒரு உருவம் கிராஸானது போல் தென்பட பயந்து போய் எல்லாரையும் கூட்ட மறுபடியும் அங்கு யாரும் இல்லாமல் மரியா பல்ப் வாங்குகிறாள். 


தாராவுக்கும் மரியா தேவையில்லாமல் இப்படி பண்ண மாட்டாளே என்ற சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்...


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. பொதுவாக, தொலைக்காட்சி தொடருக்கு இருக்கும் தொடரை போன்றே இந்த தொடருக்கும் பெரிய வரவேற்பு உள்ளது. இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில், சினிமா நட்சத்திரங்களை விட அதிக கவனத்தை பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மாரி சீரியல் மட்டுமின்றி, கார்த்திகை தீபம், சந்தியா ராகம், இதயம், நினைத்தேன் வந்தாய், சீதாராமன் உள்ளிட்ட பல ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனை தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் Zee5 ஓடிடியில் இலவசமாகவும் நீங்கள் பார்க்கலாம். 


மேலும் படிக்க | ஜானகியை சுற்றி வளைத்த ரவுடிகள் - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ