இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினிமா இயக்குநர்களை தன் வீட்டிற்கு அழைத்து ட்ரீட் வைத்துள்ளார். இது குறித்து இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிரத்னம் வீட்டில் ஒன்று கூடிய கோலிவுட் இயக்குநர்கள்..!


தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரை இயக்குநர் மணிரத்னம் அவர் வீட்டிற்கு அழைத்து ட்ரீட் வைத்துள்ளார். 


மேலும் படிக்க | ஹீரோவாக CWC புகழ்.. பூஜையுடன் தொடங்கிய 'துடிக்கிறது மீசை' படப்பிடிப்பு


தமிழ் சினிமாவின் இயக்குநர்கள்:


இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலரை தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களுடன் நேரம் செலவிட்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதில், தற்போதைய இளைஞர்களுக்கு பிடித்த இயக்குநர்களாக விளங்கும் லோக்கேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ்ஜில் இருந்து அப்போதைய இளசுகளுக்கு பிடித்த கௌதம் மேனன், லிங்குசாமி என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 


என்ன விசேஷம்..?


பொதுவாக, இயக்குநர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்றாலே அதில் ஏதாவது விஷயம் ஒளிந்திருக்கும் என ரசிகர்கள் கருதுவது வழக்கம். அதுவும் தமிழ் சினிமாவின் லெஜண்ட் இயக்குநர்கள் ஒன்று சேர்ந்தால்..? தமிழ் சினிமாவில் தற்போதுள்ள மூத்த இயக்குநர்களுள் ஒருவராக விளங்குகிறார் மணிரத்னம். வயது அதிகமானவர் என்றாலும், மனதளவில் இளம் சிந்தனைகளை கொண்டிருப்பவர் இவர். இளம் தலைமுறை இயக்குநர்கள் உள்பட, சக இயக்குநர்களை அவப்போது அவர்களது படங்களுக்காக பாராட்டுவதிலும் அவர்களது திறமையை ஊக்குவித்து தட்டிக்கொடுப்பதும் இவரது வழக்கம்.  தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் இயக்குநர்களை தன் இல்லத்திற்கு அழைத்து அனைவரையும் சந்தித்து மகிழ்ந்துள்ளார், மணிரத்னம். இது குறித்து இயக்குநர் ஷங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 



 


ஷங்கரின் பதிவு..!


இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் மற்றும் பிற இயக்குநர்களை அவரது இல்லத்தில் சந்தித்தது குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குநர் மணிரத்னமிற்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்த அற்புதமான மாலை நேரத்தை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி மணிர்த்னம் சார். ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த இயக்குநர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். 


இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள்:


மணிரத்னமின் வீட்டில் நடந்த ட்ரீட்டில் பாடகர் கார்த்திக்கும் பங்கேற்றுள்ளார். இவர், ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களை இதில் பாடியுள்ளார். இது தனக்கு மிகவும் vibeஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தருணங்களை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி கூறிய ஷங்கர், மணிரத்னமின் மனைவியான சுஹாசினியின் விருந்தோம்பலுக்காக அவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 


Present ஆன இயக்குநர்கள்:


மணிரத்னமின் வீட்டு விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்கள். இவர்கள் ஆனைவரும் மணிரத்னமுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, ஷங்கர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 


மிஸ் ஆன இயக்குநர்கள்:


ஷங்கரின் பதிவு வைரலாகி வரும் நிலையில் இதில் சில ரசிகர்கள் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். அதில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரை காணவில்லை என தெரிவித்துள்ளனர். 


அடுத்தடுத்த படங்கள்:


மணிரத்னமின் வீட்டி விழாவில் கலந்து கொண்ட இயக்குநர்களில் சிலர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளனர். இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ், லியோ பட வேளைகளில் பிசியாக இருக்கிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகையில் கணவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ