திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளரான மணிரத்னம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2018, 04:49 PM IST
திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி! title=

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளரான மணிரத்னம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

62 வயதான இவர் 1983ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 35 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழில் 26 படங்களையும் இந்தியில் 6 படங்களையும், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படங்களையும் இயக்கியுள்ளார். 

இவருடைய இயக்கத்தில் இறுதியாக 'காற்று வெளியிடை' படம் வெளியானது. தற்போது இவர் 'செக்க சிவந்த வானம்' என்ற மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திடீரென்று வழக்கமான உடல் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News