இயக்குநர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் 2022 இல் வெளியாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கும் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


ALSO READ | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்


இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாது. இதற்கு பிறகு படம் குறித்து எவ்வித அப்டேடும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதில் 2022-ம் ஆண்டு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 



 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.


ALSO READ | ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடியாக கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR