நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம்’ என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளர் GV பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்பவரை கிராமிய பாடலாக வெளியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காப்பான் திரைப்படத்திற்குப் பிறகு, சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சூரரைப் போற்று. 


இந்தப் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபரணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.


சூரரைப் போற்று படத்தின் கதை ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப் போற்று படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தற்போது நடைபெற்றுவருகிறது.


சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம்’ என்னும் பாடல் வெளியாகியுள்ளது.



இந்த பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகளை எழுத, செந்தில் கணேஷ் பாடியுள்ளார். இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக., 


"உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ்சாதி மனுஷங்களா ?, உட்கார்ந்து திங்கிறவனெல்லாம் மேல்சாதி வம்சங்களா? 


என்னாங்கடா நாடு சாதியை தூக்கி போடு என்னாங்கடா நாடு சாதியை பொதைச்சி மூடு" போன்ற வரிகளை படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வரிகள் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.