ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்று ,மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் பெரிய இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது மீனாட்சி பொண்ணுங்க சீரியல். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை நடந்த கதை..


மக்களின் வரவேற்பை அதிகம் பெற்றுள்ள மீனாட்சி பொண்ணுங்க, எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் மீனாட்சி தொலைந்து போக, பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக செய்தி வந்தது. ஆனால் அவர் உயிரிடன் வந்தார். அதன் பின்னர் ஷக்தி ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு தயாராவது போன்ற பல சம்பவங்கள் நடந்தது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோயிலில் ரோகித்துக்கு பயந்து ஒளிந்து விட்டு பூஜா வருவதற்குள் பொட்டு வைக்கும் சம்பிரதாயம் முடிந்து விடுகிறது. 


இன்றைய எபிசோட்!


கோவிலுக்கு வந்த புஷ்பாவும் சங்கிலியும் வெற்றியின் மனதில் யார் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல பூஜாவும் சரளாவும் யோசித்து வெற்றிக்கு வேறு ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்று கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள். 


சக்தி வெற்றியை விட்டு பிரிய கூடாது என்று பய பக்தியாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள். வெற்றிக்கு கோவிலில் வைத்து கல்யாணம் நடக்க இருக்கும் விஷயத்தை சங்கிலியும் புஷ்பாவும் பேசிக்கொண்டிருக்க, இதை நீதிமணி கேட்டு விடுகிறான்.


கோவிலில் சரளாவும் புஷ்பாவும் வெற்றிக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களின் திட்டம் தெரியாமல் வெற்றி சாதாரணமாக கோவிலுக்கு வருகிறான். வெற்றியை பட்டு வேஷ்டி சட்டை மாற்றி வர சொல்லி வெற்றியை அழைத்து மண மேடையில் உட்கார வைக்கிறார்கள்.


பக்கத்தில் பூஜாவையும் உட்கார வைக்க அவன் குழப்பத்துடன் அவர்களை பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | ‘குட் நைட்’ நாயகன் மணிகண்டனின் அடுத்த படம்..! விஜய் சேதுபதி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ