ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக விளங்கும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு பலத்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய எபிசோட்:


மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் முந்தைய எபிசோடுகளில், மீனாட்சி இறந்துவிட்டதாக கூறி, அவரது அஸ்தி வீட்டிற்கு வருகிறது. இதையடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மெல்ல அதுதான் உண்மை என ஏற்றுக்கொண்டு மீனாட்சிக்கு அனைவரும் இறுதி சடங்குகளை செய்கின்றனர். இந்நிலையில் துர்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைத்தடுப்பதற்கு வில்லன்-வில்லிகளின் சதித்திட்டமும் நடக்கிறது. இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்று நடக்கவிருப்பது என்ன? வாங்க பார்த்து தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!



இன்றைய எபிசோட்:


மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. யமுனா சாந்தாவிடம் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என ஃபீல் செய்ய கார்த்திக் இப்படி பயந்தவனாக இருக்கிறானே என சாந்தா அவனை திட்டுகிறான். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியே கல் கோவிலில் புஷ்பா துர்காவிடம் நீ சங்கிலியை கல்யாணம் செய்து கொள் எனக் கேட்க அவள் முடியாது என்று சொல்கிறாள். 



புஷ்பா நீ சம்மதம் சொல்லவில்லை என்றால் பஞ்சாயத்தில் உன் அக்கா யமுனாவின் தாலி இறங்கிவிடும் என்று சொல்ல துர்கா யோசிக்கிறாள். அதன் பிறகு சக்தி, யமுனா, சாந்தா மூவரும் பஞ்சாயத்தில் என்ன நடக்குமோ என பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் துர்கா இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு சங்கிலியை கல்யாணம் செய்வது தான் என சொல்கிறாள்.  மறுபக்கம் புஷ்பா நீதிமணியிடம் பஞ்சாயத்தில் நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மிரட்டுகிறாள். பிறகு புஷ்பா பூஜாவிடம் நாளைக்கு பஞ்சாயத்திற்கு சக்தி வரக்கூடாது அது உன் பொறுப்பு என்று சொல்லி அனுப்புகிறாள்.


காணத்தவறாதீர்கள்..


இப்படி பரபரப்பாகவும் விருவிருப்பாகவும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இந்த சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | அன்று அழகு நடிகை..இன்று அன்பான அம்மா..நடிகை ரம்பா குறித்த குட்டி கதை இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ