ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது மீனாட்சி பொண்ணுங்க சீரியல். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதுவரை நடந்தது..


பஞ்சாயத்தில் மீனாட்சி தன்னிடம் தான் நகைகள் இருக்கிறது என்று கொண்டு வந்து பஞ்சாயத்தில் கொடுக்கிறாள். இதை கோவில் பூசாரி தான் கொடுத்து வைக்க சொன்னார் என்று சொல்கிறாள்.  ஆனால் பூசாரி நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று பழியை மீனாட்சியின் மீது போடுகிறான். இதனால் அனைவரும் மீனாட்சி திருடி என்று நினைத்து விட மீனாட்சி உண்மையை நிரூபிக்கும் வரை நான் அன்னம் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று சொல்கிறாள்.அதன் பிறகு மீனாட்சிக்கு திருட்டு பட்டம் கட்டி விட்டதால் ஊர் மரியாதை பரிவட்டம் புஷ்பா தனக்குத்தான் என்று ஊர்காரர்களிடம் சொல்லி விட ஊர் காரர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் சாந்தா மீது கோரக் காளி வந்து ஆடி யார் உண்மையான திருடன் என்று கண்டுபிடிக்கட்டும் என்று சொல்ல ஊர்காரர்கள் அது மிகவும் கோரமான சாமி என்று சொல்ல ,மீனாட்சி ஒப்பு கொள்கிறாள். 


அடுத்து நடந்தது என்ன? இன்றைய எபிசோடில் தெரிந்து கொள்வோம் வாங்க..


மேலும் படிக்க | ‘கொலை மிரட்டல் விடுக்கிறார்..’ தந்தை மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!


இன்றைய எபிசோட்..


இந்த தொடரில் நேற்று கோரக்காளி வந்து மீனாட்சி குற்றமற்றவள் என்று சொன்னதை தொடர்ந்து அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது‌.இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் அனைவரும் வெற்றியை பாராட்ட சக்தி டென்ஷனாகி சாப்பிடாமல் எழுந்து போகிறாள். இதனால் வெற்றி சக்திக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இதை பார்த்து மீனாட்சி சந்தோஷப்படுகிறாள்.


மறுபக்கம் மீனாட்சி வாங்கிய பரிவட்டத்தை மொபைல் வீடியோவில் பார்த்து புஷ்பா எரிச்சல் அடைகிறாள். அரசியல்வாதிகள் வந்து புஷ்பாவிடம் பணம் கேட்க, நீதிமணி இருந்தால் தான் கையெழுத்து போட்டு பணம் பெற முடியும் என்ற சூழலில் நீதிமணியை தேடுவதற்கு சங்கிலியுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை யோசிக்கிறாள். 



அதன் பிறகு மீனாட்சி வீட்டில் ஒருவர் வந்து புஷ்பா பஞ்சாயத்து வைத்திருப்பதாக கூற அனைவரும் பஞ்சாயத்துக்கு செல்கிறார்கள். பஞ்சாயத்தில் புஷ்பா நீதிமணி சொத்தை எல்லாம் எனக்கு கொடுத்து விடுவான் என்று அவனை கடத்தி விட்டதாகவும், எனக்கு நீதிமணி எழுதிக் கொடுத்த சொத்து பத்திரத்தை வெற்றி கிழித்து விட்டதாகவும் பஞ்சாயத்தில் புகார் கூறுகிறாள். 


காணத்தவறாதீர்கள்..


இப்படியான விறுவிறுப்பாக இத்தொடர் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவுக்காக ஏங்கும் ராம்.. சிறையில் வாடும் சீதா!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ