தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்று ரங்கநாயகி ஷக்தியை வெளியே அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, குடுகுடுப்பைக்காரன் சொன்னதிலிருந்து மனசு சரியில்லை என்று செல்வம் முருகனிடம் சொல்ல செல்வ முருகன் ஆறுதல் சொல்கிறார். அதை தொடர்ந்து புஷ்பா போலீஸ் லாக்கப்பில் உட்கார்ந்து தியானம் செய்தவாறு சக்தி தன்னை அவமானப்படுத்தியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது சில ரவுடி பெண்கள் அதே லாக்கப்பில் வந்து உட்கார்ந்து புஷ்பாவை பற்றி விசாரிக்க புஷ்பா கோபத்துடன் அவர்களை திட்டுகிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மன்சூர் அலிகான் விவகாரம்; டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு 



அடுத்து சங்கிலி அங்கே புஷ்பாவிற்கு பிரியாணி வாங்கிக்கொண்டு வந்து கொடுக்க, அதை சக கைதிகளுக்கு கொடுத்துவிட்டு, தன்னை அவமானபடுத்திய சக்தி குடும்பத்தை நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டும். கார்த்திக்கை இரண்டாம் கல்யாணம் செய்ய வைத்து சக்தியின் அக்காவை வாழா வெட்டியாக வீட்டில் இருப்பதை சக்தி பார்த்து கஷ்டப்பட வேண்டும். இனி சக்தியை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று திட்டம் போடுகிறாள். மறுபக்கம் மீனாட்சியின் வீட்டிற்கு வந்த வைத்தியர் மீனாட்சியை நலம் விசாரித்துவிட்டு சத்தி துர்காவை தனியாக அழைத்து மீனாட்சிக்கு அதிர்ச்சியான செய்திகளை எதுவும் சொல்லாதீர்கள், அவளுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆகவே கால பைரவர் ஓமம் ஒன்று செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 


அடுத்து விழா நின்று போய் மன உளைச்சலில் இருக்கும் ரங்கநாயகியும் கோவில் சென்று ஹோமம் நடத்தலாம் என முடிவு செய்து குடும்பத்துடன் கோவிலுக்கு வருகிறாள். அதே நாளில் அதே நேரத்தில் யமுனாவும் துர்காவும் மீனாட்சியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்கள்.யமுனா ஓமம் நடத்துவதற்கான பொருட்கள் வாங்கி வர செல்ல துர்காவும் மீனாட்சியும் கோவிலின் சன்னதிக்குள் செல்ல அதே இடத்திற்கு ரங்கநாயகியும் வந்து கொண்டிருக்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | பிக்பாஸில் மீண்டும் வைல்ட்கார்ட்! உள்நுழையும் 3 பேர் இவர்கள்தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ