சீதாராமன் அப்டேட்: மரண பயத்தில் மகா... ராஜசேகர் கொடுத்த திடீர் ஷாக்!

Seetha Raman Today's Episode Update: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதாராமன் தொடரின் இன்றைய எபிசோட் குறித்த அப்டேட்டை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 20, 2023, 01:57 PM IST
  • சீதா சில நாள்களுக்கு முன் ரவுடிகளால் கடத்தப்பட்டார்.
  • மகா, அர்ச்சனா ஆகியோர் அந்த ரவுடிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
  • ராம் மற்றும் துரை சீதாவை காப்பற்றினர்.
சீதாராமன் அப்டேட்: மரண பயத்தில் மகா... ராஜசேகர் கொடுத்த திடீர் ஷாக்! title=

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை சீதாராமன் சீரியல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம், மாரி, அண்ணா, சந்தியா ராகம் போன்ற தொடர்களும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன.

மிரட்டல் விடுக்கும் ரவுடி

இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் ராஜசேகர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து தற்போது அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது ராஜசேகர் 'நீங்க உங்க வீட்டு ஆளுங்க என்பதால் அமைதியா இருக்கலாம். நான் சும்மா விட மாட்டேன்' என்று சொல்கிறார். பிறகு மகா வீட்டிற்கு வர ராஜசேகர் வந்திருக்கும் விஷயம் தெரிய வர சற்று அதிர்ச்சி அடைகிறாள். 

ராஜசேகர், 'இவங்க ஏதாவது செய்திருக்கணும்' என்று சத்தம் போட மகாவுக்கும் அர்ச்சனாவுக்கு பயம் உருவாகிறது, அதன் பிறகு அர்ச்சனா தூங்கி கொண்டிருக்கும் போது சீதாவை கடத்திய ரவுடி பணம் கேட்டு மிரட்ட மகாவை எழுப்பி போனை கொடுத்து விடுகிறாள்.

மேலும் படிக்க | மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த தேசிய மகளிர் ஆணையம்-தாமாக முன் வந்து வழக்கு பதிவு!

'நீ இல்லனா நானும் இல்ல'

மகா 'இப்போ பணம் எல்லாம் கொடுக்க முடியாது, அப்படி கொடுத்தால் நான் மாட்டிக்குவேன்' என்று சொல்ல ரவுடி பணத்தை கொடுத்தே ஆகணும் என மிரட்டுகிறான், ராஜசேகர் தூக்கம் இல்லாமல் யோசனையிலேயே இருக்க அந்த நேரம் பார்த்து அர்ச்சனா கீழே இறங்கி வர இவர்கள் பேசுவதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைகிறாள். 

சீதாவும் ராமும் ரூமுக்கு சென்ற பிறகு ராஜசேகர் அர்ச்சனாவை கூப்பிட்டு விசாரிக்க அவளுக்கு பயம் அதிகமாகிறது. சீதா அறையில் 'நான் இன்னைக்கு செத்து போயிருக்க வேண்டியவள்' என்று பேச ராம் 'நீ இல்லனா நானும் இருந்திருக்க மாட்டேன்' என இருவரும் காதலை வெளிப்படுத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

முன்கதை

அதாவது, முன்னதாக சீதாராமன் சீரியலில் மகாவும், அர்ச்சனாவும் ஏற்பாடு செய்த ரவுடிகள் சீதாவை கடத்தி சென்றனர். மேலும் அவர்கள் யாரும் இல்லாத இடத்தில் சிமெண்ட் தொட்டியில் அடைத்தனர். மகாவின் மொபைல் லொக்கேஷன் மூலம் அந்த இடத்திற்கு ராம் மற்றும் துரை ஆகியோர் செல்ல, ரவுடிகள் வேறு வழியில் அங்கிருந்து தப்பித்தனர். மேலும், ராம் மற்றும் துரை சேர்ந்த சீதாவை கண்டுபிடித்து அவரின் உயிரை காப்பற்றினர்.

சீதாராமன் சீரியலை எதில் பார்ப்பது?

சீதாராமன் சீரியல் நடப்பாண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 செயிலி மூலமும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News