தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுள் மிகவும் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது மீனாட்சி பொண்ணுங்க சீரியல். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நேற்றைய எபிசோட்: 


நேற்றைய எபிசோடில் அனைவரும் வெற்றியை பாராட்ட சக்தி டென்ஷனாகி சாப்பிடாமல் எழுந்து போகிறாள். இதனால் வெற்றி சக்திக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இதை பார்த்து மீனாட்சி சந்தோஷப்படுகிறாள். மறுபக்கம் மீனாட்சி வாங்கிய பரிவட்டத்தை மொபைல் வீடியோவில் பார்த்து புஷ்பா எரிச்சல் அடைகிறாள். அரசியல்வாதிகள் வந்து புஷ்பாவிடம் பணம் கேட்க, நீதிமணி இருந்தால் தான் கையெழுத்து போட்டு பணம் பெற முடியும் என்ற சூழலில் நீதிமணியை தேடுவதற்கு சங்கிலியுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை யோசிக்கிறாள். 


மேலும் படிக்க | சாதியை வைத்து வாய்ப்பு தருகிறாரா மாரி செல்வராஜ்..? அவரே கொடுத்த விளக்கம்..!


அதன் பிறகு மீனாட்சி வீட்டில் ஒருவர் வந்து புஷ்பா பஞ்சாயத்து வைத்திருப்பதாக கூற அனைவரும் பஞ்சாயத்துக்கு செல்கிறார்கள். பஞ்சாயத்தில் புஷ்பா நீதிமணி சொத்தை எல்லாம் எனக்கு கொடுத்து விடுவான் என்று அவனை கடத்தி விட்டதாகவும், எனக்கு நீதிமணி எழுதிக் கொடுத்த சொத்து பத்திரத்தை வெற்றி கிழித்து விட்டதாகவும் பஞ்சாயத்தில் புகார் கூறுகிறாள். அடுத்து நடக்கவிருப்பது என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம். 


இன்றைய எபிசோட்: 


புஷ்பா பஞ்சாயத்தை கூட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் புஷ்பா தான் நீதிமணியை கொல்ல பார்த்தாள், என்று மீனாட்சி கூற புஷ்பா அதனை மறுக்கிறாள். நீதிமணியே வந்து சொன்னால் தான் குற்றம் நிரூபணம் ஆகும் என்று சொல்லி விட வெற்றி நீதிமணியை தேடுகிறான் .  மீனாட்சியும் வெற்றியும் நீதிமணியை ஊர் ஊராகத் தேடுகிறார்கள். அதே போல் நீதிமணியை காணவில்லை என புஷ்பா, பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறாள். விளம்பரத்தை நீதிமணி பார்த்து, அருகில் இருக்கும் கோயில் பூசாரிக்கு தெரியாமல் கிழித்து போட்டு விடுகிறான்.


விளம்பரம் கொடுத்த புஷ்பா நீதிமணி தனக்கு போன் செய்வான் என்று காத்திருக்கிறாள். அதே போல் வெற்றி ஷண்முகத்துக்கு ஆபத்து என விளம்பரம் கொடுக்க சக்தி வெற்றியிடம் இன்று அப்பா கட்டாயம் உனக்கு போன் செய்வார் என்று கூறுகிறாள்.  இதனையடுத்து சண்முகத்திற்கு என்ன ஆனது என்று நீதிமணி புஷ்பாவிடம் போன் செய்து விசாரிக்க, வெற்றி திட்டம் போட்டு விளம்பரம் கொடுத்து நீதிமணியை கூட்டிக்கொண்டு வந்து விடுவான் என புஷ்பாவுக்கு பயம் வருகிறது. 



காணத்தவறாதீர்கள்..


இப்படியான விறுவிறுப்பாக இத்தொடர் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சினிமாவை விட்டு விலகும் சமந்தா..? ‘அந்த’ பாதிப்புதான் காரணமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ