லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டிசம்பர் மாதம் எப்பொழுதும் திருவிழா காலம் என்பதால் இந்த மாதத்தில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடுத்த பிசினஸ்.. புதிய நாப்கின் தொழிலை ஆரம்பித்த நயன்தாரா


இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'அன்னபூரணி - The Goddess of Food' படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.



ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வளர்த்துள்ளார். ரஜினி, சூர்யா, விஜய், அஜித் குமார் என தொடர்ந்து முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் என்ட்ரியும் கொடுத்து இருந்தார் நயன்தார.  அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து இருந்த ஜவான் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் நயன்தாரா.  இதுவரையில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு இருந்த நயன்தாரா, ஜவான் வெற்றிக்கு பிறகு 12 கோடி ரூபாய் சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.  மேலும் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


கமல்ஹாசன் - மணிரத்தினம் கூட்டணியில் உருவாக உள்ள கமலின் 234வது படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வாரத்தை நடத்தி வருகிறது. முதலில் இந்த படத்தில் திரிஷா நடிக்க இருந்த'நிலையில், படக்குழு நயன்தாராவிடம் பேசி வருகிறது.  படங்களில் நடிப்பதை தவிர நயன்தாரா தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.  9ஸ்கின் என்ற புதிய பிராண்டை தனது கணவர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.  ஸ்கின் பெண்களின் அழகு மற்றும் சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிரீமியம் ஸ்கின் புரோடக்ட்ஸ்களை வழங்குகிறது. மேலும் இந்த புரோடக்ட் இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 9ஸ்கின் பிராண்டில் இரண்டு வகையான சீரம், இரண்டு வகையான கிரீம் மற்றும் ஒரு எண்ணெய் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.999ஆக உள்ளது, அதிகபட்சம் ரூ.1,899ஆக உள்ளது. 


மேலும் படிக்க | இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்? இயக்குனர் இவரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ