ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து நடித்துவந்த நயன்தாரா சில தனிப்பட்ட காரணங்களுக்காக திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கினார். அதன் பிறகு மீண்டும் களமிறங்கிய அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி அறம், மாயா போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் முதலிடத்திற்கு வந்தார். மேலும் அவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கினர்.தமிழ் படங்களில் மட்டுமின்றி தற்போது அவர் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.



இந்தச் சூழலில் அவர் தனது சம்பளத்தை 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தினார். இருப்பினும் நயன்தாராவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவரை தொடர்ந்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புக் செய்துவருகின்றனர்.


மேலும் படிக்க | Beast Twitter Reactions: பீஸ்ட் ட்விட்டர் விமர்சனங்கள், என்ன இப்படி ஆகிடுச்சே


இந்நிலையில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்திலும் நயன்தாராவே கதாநாயகி என கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக அவர் தனது சம்பளத்தை ஐந்து கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



மேலும், இப்படத்துக்கு அவர் 20 நாள்கள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


மேலும் படிக்க | இப்படி பண்ணிடீங்களே நெல்சன்! பீஸ்ட் திரைவிமர்சனம்!


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR