தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்வி ஏற்பாடு செய்த போலி சாமியார் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மனோகரி, செல்விக்கு அதிர்ச்சி


அதாவது, போலி சாமியார் பேயை ஓட்டுவதாக சொல்லி ரூம் ரூமாக சென்று திருட்டு வேலைகளை செய்ய இதை கவின் பார்த்து விடுகிறான். என்ன திருடுனீங்க என்று கேட்க அந்த சாமியார் கவினை அடிக்க அவன் மயங்கி விழ அங்கிருந்து இந்துவின் ஆவிக்கு சக்தி வந்து சாமியாரை அடித்து துரத்த சத்தம் கேட்டு மனோகரியும் செல்வியும் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதையெல்லாம் பேயோட வேலை என்று பயப்படுகின்றனர். 


இதையடுத்து மனோகரி உண்மையான சாமியார் ஒருவரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் நீ எதோ தப்பு பண்ணி இருக்க, உன்னால இந்த உலகத்தை விட்டு போனது திரும்ப வந்து இருக்கு. அது பழி தீர்க்காமல் போகாது என்று சொல்லி கொஞ்சம் மஞ்சளையும் எலுமிச்சை பழத்தையும் கொடுத்து ஒரு பூஜையை செய்தால் அந்த ஆத்மாவால் வீட்டிற்குள் வர முடியாது என்று சொல்கிறார். 


மேலும் படிக்க | முழுக்க அரசியல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது இயக்கத்தில்?


பூஜைக்கான வேலையை தொடங்கும் மனோகரி


அதே சமயம் இந்த மஞ்சளை அந்த ஆவியோடு ரத்த சம்மந்தம் இருக்கவங்க யாரும் தொட கூடாது என்றும் சொல்லி கொடுத்து அனுப்ப வீட்டிற்கு வந்த மனோகரி பூஜைக்கான வேலையை தொடங்குகிறாள். ரூமில் எழில் இந்து ஞாபகத்தில் கலங்கி அழுகிறான். இந்துவின் ஆவி அவனை கட்டியணைக்க அதை உணரும் எழில்  நீ இங்க தான் இருக்க இந்து வெளியில் வந்து தேடி அலைய மழையில் நனைந்து விடுகிறான். அதற்குள் மனோகரி பூஜையை முடித்து பானையையும் மஞ்சளையும் சாமியார் சொன்னது போல் வைத்து விட இந்துவால் வீட்டிற்குள் நுழைய முடியாமல் போகிறது. 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?


நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | காளி வெங்கட் ஹீரோவாக நடித்து இருக்கும் தோனிமா! இயக்குனர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ