சமிபத்தில் ரஜினி நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ரஞ்சித் அடுத்து வேறு சில முன்னணி ஹீரோக்களின் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இதற்க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.


ஆனால் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் மீண்டும் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பட தயாரிப்பு நிறுவனம் ரஜினியின் புதிய படத்தை தயாரிக்கிறது. பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்குகிறார். 


இந்த தகவலை தனுஷ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்கள். தற்போது ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்ததும் ரஜினியின் புதிய படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.


தனுஷ் டுவிட்டர் பக்கத்தில்:-



 


பா.ரஞ்சித் டுவிட்டர் பக்கத்தில்:-