பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். 

 

தற்போது இவர் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.

 

தற்போது பிரபாசுக்கு 38 வயதாகிறது. எனவே அவரது திருமணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. 

 

‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின. இந்த சர்ச்சைக்கு பிரபாஸ் சமிபத்தில் முற்றுப் புள்ளி வைத்தார்.

 

ஆனால் தற்போது பிரபாஸின் திருமணத்தைப் பற்றி அவரது சகோதரி பரகதி உல்லாபதி புதிய விவரம் ஒன்று கூறி உள்ளார். அவர்,

 

" பிரபாஸின் திருமணத்திற்கு நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். கண்டிப்பாக எங்களுக்கு உற்சாக இருக்கும்" என்றார்.

 

முன்னதாக, முழு கவனமும் படத்தில் உள்ளது. திருமணம் செய்வதாக இருந்தால் நானே அறிவிப்பேன் என்று கூறி இருந்த பிரபாஸ் தற்போது அவரது சகோதரியின் இந்த கருத்து உண்மையா என்று உறுதி படுத்த முடியவில்லை.