இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து விலங்குகளை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது ஆனால் முழுக்க முழுக்க சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தை பயாஸ்கோப் நிறுவனமும், அக்கிரா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பார்த்திபன் இந்த படத்தை இயக்க டி. இமான் இசையமைத்துள்ளார்.மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசம் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே வகுப்பில் படிக்கும் 2கே கிட்ஸ் 13 பேர் பள்ளியை கட் அடித்து விட்டு அவர்களில் ஒருவருடைய பாட்டி வீட்டிற்கு செல்ல திட்டமிடுகின்றனர். அங்கு சென்று அமானுஷ்ய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள புறப்படுகின்றனர். அங்கு போற வழியில் அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை பார்த்திபன் அவரது ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த டீன் ஏஜ் குழந்தைகள் 13 பேர் பள்ளியை கட் அடித்து விட்டு அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் ஏற்படும் அமானுஷ்யங்கள் ஒருவித சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை படம் பார்க்கும் நமக்கும் தூண்டுகிறது.



இடைவெளி வரை இந்த சுவாரசியம் குறையாமல் அப்படியே இருக்கிறது, ஆனால் இடைவெளி முடிந்து படம் தொடங்கியதும் அப்படியே வேறு ஒரு கதையை நோக்கி படம் நகர்கிறது. குழந்தைகளை மட்டும் வைத்து முழு படத்தையும் எடுத்திருந்தாலே இன்னும் படம் சற்று நன்றாகவே வந்திருக்கும்.  பார்த்திபனின் கதாபாத்திரம் வந்ததிலிருந்து படம் அப்படியே படுத்து விடுகிறது, அங்கு இருந்து படம் எப்போது முடியும் என்ற யோசனை தான் நமக்கு எழுகிறது.  மேலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு சில கதாபாத்திரங்கள் படத்திற்கு வருகிறது, அதற்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படித்தான் யோகி பாபுவின் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. பெரும் இரண்டு காட்சிகளில் மட்டுமே யோகி பாபு வந்தாலும் திணிக்கப்பட்டது போல் தான் தெரிகிறது.


படத்தில் நடித்திருக்கும் 13 குழந்தைகளும் புதுமுகமாக இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.  பார்த்திபன் கதாபாத்திரம் சொல்ல வரும் விஷயங்கள் புதிதாக இருந்தாலும் அவை படம் பார்க்கும் நமக்கு புரியாமல் போய்விடுகிறது, இதனால் கதைக்குள் நம்மளால் செல்ல முடியவில்லை.  ஆங்காங்கே சில அரசியல் வசனங்களும் படம் முழுக்க இடம் பெற்றிருந்தது.  டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. படத்தில் முக்காவாசி காட்சிகள் ஒரு பரந்த நிலப்பரப்பில் நடக்கிறது, ஆனாலும் அவை படத்திற்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. இப்படி ஒரு கதையை யோசித்ததற்கு இயக்குனர் பார்த்திபன் அவர்களை தனியாக பாராட்டலாம் என்றாலும் அதனை படமாக எடுத்ததில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.


மேலும் படிக்க | Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ