2017-ம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். நேற்று தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார். வருகின்ற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த்தை சந்திக்க காலையிலேயே ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். இதையடுத்து வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.