மகள் ஐஸ்வர்யா தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் ரஜினிகாந்த்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகள் ஐஸ்வர்யா தனுஷ் எழுதியுள்ள புதிய புத்தகத்திற்கு டிவிட்டர் வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.முதன் முறையாக ஐஸ்வர்யா தனுஷ் தனது வாழ்வில் நடந்த, சுவையான, சோகமான மற்றும் தனது அனுபவம் ஆகியவற்றை புத்தகமாக எழுதியுள்ளார். 


ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த புத்தகத்திற்கு 'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்' ன்று பெயரிடப்பட்டுள்ளது.  


தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.


இந்நிலையில் தனது மகளின் எழுத்தாளர் அவதாரத்திற்கு தலைவர் ரஜினிகாந்த் தனது சமுக வலைத்தளம் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


டிவிட்டரில் கூறியதாவது:-


எனது மகள் முதன் முதலாக எழுதியுள்ள "ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்" புத்தகத்தை வாசகர்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தனது டிவிட்டர் வாழ்த்தி உள்ளார்.