தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு, சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள ஒருவர் அவரது வீட்டில் உள்ளதாகவும், அவருக்கு பெரிய தொகையில் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோலிவுட் திரையுலகில், மெகா ஸ்டார் என்றால் குழந்தைக்கும் தெரியும். அந்த அளவிற்கு பெரிய நடிகராக இருப்பவர், சிரஞ்சீவி. இவரது குடும்பத்தை அனைவரும் ‘மெகா ஸ்டார்’ குடும்பம் என்று அழைப்பர். இவரது மகன் ராம் சரணும் தென்னிந்திய அளவில் பெரிய ஹீரோவாக உள்ளார். இவரது முகம், தமிழ் ரசிகர்களுக்கு ‘மாவீரன்’ படம் மூலம் நன்கு தெரிந்தது. இதையடுத்து, தற்போது அவர் இந்திய அளவில் பிரபலமான நாயகனாக உள்ளார். இவர் ஹீரோவாக நடித்திருந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது பெற்றது. 


பெண் குழந்தை..


ராம் சரணுக்கும், உபாசனா கொண்டீலாவிற்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. திருமணம் ஆகி 10ஆண்டுகளுக்கு பிறகு உபாசனா கர்பமானார். இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.


தங்களது குழந்தைக்கு, கின் காரா என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குழந்தையின் முகத்தை எந்த சமூக வலைதளங்களில் பதவிடாமல் உள்ளனர். இந்த குழந்தையை மெகா ஸ்டார் குடும்பத்தினர் பத்திரமாக பார்த்துக்கொண்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | Thalapathy 69:விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது கார்த்திக் சுப்பராஜா? வெற்றி மாறனா? பதில் இதோ!


குழந்தையை பார்த்துக்கொள்பவர்:


வசடியான பிரபலங்கள் அனைவருமே அவர்களின் குடும்பத்தினரை பார்த்துக்கொள்ள, ஒருவரை நியமிப்பது சகஜம். அப்படி, மெகா ஸ்டார் குடும்பத்தினரும் தங்களது செல்ல குழந்தையை பார்த்துக்கொள்ள ஒருவரை நியமித்துள்ளனர். இவரது பெயர் சாவித்ரி என கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே கரீனா கபூர் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களின் குழந்தைகளை பராமரித்துள்ளார். இதனால், இவரை தங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள ராம் சரண் குடும்பத்தார் நியமித்துள்ளனர். 


இத்தனை லட்சம் சம்பளமா? 


ராம் சரணின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் சாவித்ரிக்கு, மாதம் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது வெறும் மாத சம்பளம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் எத்தனை மாதங்கள் குழந்தைகளை பராமரிக்கிறாரோ, அத்தனை மாதங்களுக்கும் மாதம் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுமாம். உதவியாளருக்கே இத்தனை லட்சம் சம்பளம் கொடுக்கின்றனரா என மெகா ஸ்டார் குடும்பத்தினரை அனைவரும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 


ராம் சரண் நடிக்கும் படம்..


தெலுங்கு நடிகர் ராம் சரண், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதனை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். பாலிவுட் நாயகி கியாரா அத்வானி படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இது கார்த்திக் சுப்புராஜின் கதை என கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.


மேலும் படிக்க | அயலான் to கேப்டன் மில்லர்-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ