மும்பை: ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய ரன்வீர் சிங் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது அவுட்-ஆஃப்-பாக்ஸ் ஃபேஷன் சென்ஸால் இணையத்தை பல முறை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரன்வீர், போட்டோஷூட்டிற்காக ஆடைகளின்றி போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதால் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிக்கலில் சிக்கியுள்ளார். ஐபிசி பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை, முதலியன) 293, 509 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.



அந்த ட்வீட்டில், “மும்பையின் செம்பூர் பிஎஸ்ஸில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரை அறிந்து, நடிகர் ரன்வீருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிர்வாண படங்களை பதிவிட்டுள்ளார்.


IPC பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்களின் விற்பனை, முதலியன) 293, 509 மற்றும் IT சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | நிர்வாணமாக போஸ் கொடுத்த சர்ச்சையில் சிக்கிய திரைப்பட பிரபலங்கள்


முன்னதாக, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிர்வாண படங்களை வெளியிட்டதாக நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ரன்வீர் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங், அண்மையில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகாவிட்டாலும், தலைப்புச் செய்திகளில் இடம்பெற தவறவில்லை. ஒரு பத்திரிகை அட்டைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்தப் படங்களை வெளியிட்டதற்காக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார் நடிகர் ரண்வீர்.



ரன்வீர் சிங் மீதான புகார்
ரன்வீருக்கு எதிராக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்தது, அங்கு இந்த நிர்வாண படங்கள் பெண்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் அளித்தது. “ஐயா, நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஷ்யாம் மங்கரம் அறக்கட்டளை என்ற பெயரில் சமூகத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்றி வருகிறோம். குழந்தைகள் மற்றும் கைம்பெண்களின் கல்விக்காக வேலை செய்யும் என்.ஜி.ஓ நாங்கள். கடந்த வாரம் நடிகர் ரண்வீர் சிங்கின் பல நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பார்த்தோம், இந்த புகைப்படங்களை பார்த்தால் யாருக்கும் வெட்கம் ஏற்படும்” என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கவர்ச்சிக்காக நடிகைகளுக்கு அழுத்தம்


இந்தியா சிறந்த வரலாறு மற்றும் பாரம்பரியங்களைப் பெற்ற ஒரு நாடாகும். இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மரபுகளின்படி வாழ்கிறார்கள் மற்றும் உணர்கிறார்கள். அரசியலமைப்பில் உள்ள பல செயல்களும் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஆதரிக்கின்றன.


ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பணக்கார நாடுகளில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ள தற்கொலைகள், முதியோர் இல்லம் மற்றும் குறைவான கருவுறுதல் விகிதம் போன்ற மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் இருந்து நாம் விலகி இருக்கிறோம்.


பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம், ஆனால் அதன் பொருள் சமூகத்தில் நிர்வாணமாக உலாவ வேண்டும் என்பது இல்லை. இந்தியாவில் நடிகர்களை மக்கள் உதாரணமாக கருதி பின்பற்றுகிறார்கள், இந்தியாவின் சில பகுதிகளில் மக்கள் வழிபடுகிறார்கள். எனவே இது இந்தியர்களின் குறிப்பாக பெண்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.


இந்த புகாரின் அடிப்படையில், இந்திய குற்றவியல் சட்டம்  IPCயின் 292, 293, 509 மற்றும் IT சட்டப் பிரிவுகளின் கீழ் நடிகர் ரண்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ