தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சமந்தா. தற்போது அவருக்கு பாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இவர் கோடிக்கணக்கில் கடன் பெற்றதாக பேச்சு எழுந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு நடிகரிடமிடம் கடன்..


நடிகை சமந்தா தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். தனது தோழிகளுடன் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் குறித்த ஒரு தகவல் கடந்த 2 நாட்களாக பரவலாக பேசப்பட்டு வந்தது. பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் சமந்தா, 25 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்பட்டது. சமந்தா, கடந்த ஆண்டு ‘மயோசிடிஸ்’ என்ற தசைப்பிடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டார். இதை சரிசெய்ய அவர் அந்த கடன் தொகையை பெற்றதாக கூறப்பட்டது. இந்த தகவலுக்கு ஆரம்பத்தில் செவி சாய்க்காமல் இருந்த சமந்தா, அதன் பிறகு இன்ஸ்டாவில் பொங்கியெழுந்து விட்டார். 


மேலும் படிக்க | பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..! துடித்துப்போன ரசிகர்கள்-இப்போ எப்படி இருக்கு?



“25 கோடி கடன் வாங்கினேனா..?”


சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி செக்‌ஷனில் இந்த தகவல் குறித்து பேசியுள்ளார். அதில், “மயோசிடிஸ் பாதிப்பை குணப்படுத்த 25 கோடி கடன் வாங்கினேனா..? நான் செய்யும் வேலைக்காக நான் ஒன்றும் கற்களை சம்பாதிக்கவில்லை,  என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். மிக்க நன்றி. மயோசிடிஸ் நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைகின்றனர். அதனால், அந்த நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறை பற்றிய தகவல்களை பரப்பும் போது பொறுப்புடன் இருக்கவும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தது ஏன்..? 


நடிகை சமந்தா, கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருந்தார். ‘சாகுந்தலம்’ பட வேலைகளில் ஈடுபட்டிருந்த போதுதான் அவருக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், சில நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பினார். உடல் நிலை முழுமையாக குணமடையாத சமயத்திலும் அவர், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து கொஞ்சம் கெஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பிய அவர், இந்தியில் வருண் தவானுடன் ‘சிட்டடெல்’ தாெடரில் நடித்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதில் நடித்துக்கொண்டிருந்த போதே, சமந்தா தெலுங்கில் வெளியாகும் ‘குஷி’ படத்தில் நடித்தார். அதில் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். முன்னரே அவர் குஷி மற்றும் சிட்டடெல் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பிறகு பிரேக் எடுக்கப்போவதாக கூறியிருந்தார். இந்த சமயத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், உடல் நலனில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தன் முடியை பாதியாக வெட்டிக்கொண்டு தோழிகளுடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வருகிறார். இவர், சுமார் 6 மாதங்களுக்கு சினிமா பக்கம் வரமாட்டார் என கூறப்படுகிறது. 


சந்தானத்திற்கு ஜோடியாகும் சமந்தா..? 


நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சந்தானம், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது சமந்தாவுடன் நான் ஈ (ஈகா) படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்தார். அவருடன் ஒரு படத்தில் நடிக்க பேசப்பட்டு வருவதாகவும், ஏறக்குறைய அந்த படம் ஓகே ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சந்தானம் நகைச்சுவை நடிகராக நடிப்பதை விட்டு பல நாட்கள் ஆவதால், அவர் சமந்தாவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடிக்க பல வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: நட்சத்திராவுக்கு தயாரான ஆப்பு.. கார்த்தி போட்ட மாஸ்டர் பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ