15 வருட சுப்ரமணியபுரம்: கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் சுப்ரமணியபுரம். அறிமுக இயக்குநர் சசிகுமார் இயக்கி ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இயல்பான கதை, நடிப்புக்காக இத்திரைப்படம் பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. பாலிவுட் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் கெளதம் மேனன் உட்பட பல இயக்குநர்கள் இந்தத்திரைப்படத்தை பாராட்டி பேசியிருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் நிறைவு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் குறித்து இயக்குநர் சசிகுமார் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய சசிகுமார் கூறியதாவது.,


மேலும் படிக்க | ரஜினி டூ தனுஷ்..படத்திற்காக ‘மொட்டைதலை' லுக்கிற்கு மாறிய நடிகர்கள்..!


சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி 15 வருடம் ஆகிவிட்டது. இந்த 15 வருடம் சென்றதே தெரியவில்லை. இப்போதுதான் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது போல இருந்தது. ஆனால் அதற்குள் 15 வருடம் நிறைவாகிவிட்டது. 15 வருடமாக சுப்ரமணியபுரம் படத்தை நினைவு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மக்களின் ஆதரவு மட்டுமே. முதலில் மக்களுக்கு என்னுடைய நன்றியை நாம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த திரைப்படம் வெளியான பொழுது மக்கள் இந்த படத்தை தோளில் வைத்து கொண்டாடவில்லை, தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடினார்கள். என்றைக்குமே நான் அதை மறக்க மாட்டேன். இவ்வளவு தூரம் சினிமாவில் நான் பயணப்பட்டதற்கு சுப்ரமணியபுரம் திரைப்படம் ஒரு முக்கியமான காரணமாகும்.


எல்லோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் குறிப்பாக பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என்னுடைய நன்றி. அதேபோல இந்த படத்தில் பணியாற்றிய என்னுடைய நண்பர்கள் ஆன சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, விஜய் ஜேம்ஸ் வசந்தன், ஜெய் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை நாம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 15 வருடத்தில் சினிமாவில் பல நல்ல கெட்ட விஷயங்களை அனுபவித்து இருக்கிறேன். கத்துக்கிட்டேன் என்று சொல்வதை விட அனுபவித்து கடந்து வந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இது மறக்க முடியாத நினைவுகளாக எனக்கு இருக்கும் என்றார்.



அதேபோல் சமுத்திரக்கனியும் வீடியோ வெளியிட்டு "சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த நண்பர் சசிகுமாருக்கு நன்றி" என்று போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.



 


மேலும் படிக்க | விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ