ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொடர், சீதா ராமன். இரு காதல் ஜோடிகளின் கதையை கூறும் இந்த சீரியல் ஆரம்பம் முதலே பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விருவிருப்பிற்கு பஞ்சமில்லாத இத்தொடரில், இன்றும் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் ரசிகர்களுக்காக காத்துக்கிடக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய எபிசோட்


சீதா ராமன் கதையின் இதுவரை நடந்த கதையில், குலசேகரபட்டினம் கோவிலுக்கு மகாலட்சுமி, அர்ச்சனா, சுபாஷ், சேதுபதி ஆகியோர் செல்கின்றனர். இவரகள், அங்கே வரும் சூர்யா மற்றும் மதுமிதாவை தங்களது பக்கம் இழுப்பதற்கு திட்டம் போடுகின்றனர். மறுபக்கம், சீதாவின் மிரட்டலால் ராமின் தங்கைகள் துணி மாற்றிக் கொண்டு வெளியே வர ராம் அதை பார்த்து சந்தோஷம் அடைகிறான். பிறகு சீதா அவர்களுக்கு பூ வைத்து விட்டு அனுப்ப அவர்கள் பேக்கிற்குள் மாடர்ன் உடையை மறைத்து எடுத்து செல்கின்றனர். கடைசியில் அவர்கள் காலேஜ் சென்று பையை திறந்து பார்க்க அதில் மாடர்ன் உடை இல்லை என தெரிந்து அதிர்ச்சியாகின்றனர். ஃப்ளாஷ்கட்டில் சீதா அந்த துணியை எடுத்து விட்ட விஷயம் தெரிய வருகிறது. இதனால் கோபமாக வீட்டுக்கு வரும் தங்கைகள் சீதா பூஜை செய்து கொண்டிருக்க பூஜை தட்டை தட்டி விட்டு கோபப்பட ராம் தங்கைகளை திட்ட அவர்கள் மூவரும் ராமையும் தப்பாக பேசுகின்றனர். இதனால் சீதா அவர்களை பளார் என ஒரு அரை கொடுக்கிறாள். அடுத்து என்ன நடந்தது? இன்றைய எபிசோடில் பாரக்கலாம். 



இன்றைய எபிசோட்


ரூமுக்கு வந்த ராம் சீதாவிடம் அவங்க துணியை எதுக்கு கிழிச்ச என கேட்கும் போது அவங்க அந்த துணிகளை பேகில் வைத்து எடுத்துட்டு போய் வெளியே மாத்திக்கிறதுக்கு பிளான் பண்ணி இருந்தாங்க அதனால தான் அப்படி செய்தேன் என்று சொல்ல ராம் அமைதியாகி விடுகிறான்.  மறுபக்கம் குலசேகர பட்டினத்தில் மகாலட்சுமி மதுவை பேசி தன் பக்கம் இழுத்த நிலையில் மது அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் அவளது அப்பா ராஜசேகர் மற்றும் அம்மா உமாவும் கோவிலுக்கு வருகின்றனர். மது அப்பா அம்மாவை பார்த்து பயப்பட மகாலட்சுமி அவங்க தான் நீ பொண்ணு இல்லன்னு சொல்லிட்டாங்களே, அப்படி இருக்கும்போது நீ எதுக்கு அவங்களுக்கு பயப்படனும் என ஏத்தி விடுகிறாள். 


மேலும் படிக்க | அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்!


இதையடுத்து, மது அங்கிருந்து கிளம்பிச் செல்லும் போது ராஜசேகர் “நீ எல்லாம் எதுக்கு கோவிலுக்கு வந்த” என கோபமா திட்டி பேச மதுமிதா இது பொது இடம் இங்கே யார் வேணாலும் வரலாம் அது பத்தி நீங்க எதுக்கு கேள்வி கேட்கறீங்க என பதிலடி கொடுக்கிறாள். எங்க போனாலும் கடைசியா எங்க கிட்ட தான் வந்து நிக்கணும் என சொல்ல மதுமிதா என்ன நடந்தாலும் உங்களை தேடி வரமாட்டேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறாள். இந்த சமயத்தில் உமா தூரமாக மகா நின்று கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். அடுத்ததாக வீட்டுக்கு வந்த உமா வருத்தத்தில் இருக்கும் ராஜசேகரை சமாதானம் செய்துவிட்டு சீதாவுக்கு போன் செய்து கோவிலுக்கு மகாலட்சுமி வந்திருந்த விஷயத்தையும் மதுமிதா அப்பாவிடம் கோபமாக பேசியதையும் சொல்கிறார். 


பதிலடி கொடுத்த சீதா!


பிறகு மகாலட்சுமி வீட்டுக்கு வர சீதா குலசேகர பட்டினம் கோவிலுக்கு போயிருந்தீங்களே பிரசாதம் எங்கே என கேட்டு ஷாக் கொடுக்க மகாலட்சுமி மற்றும் சீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. உன்னுடைய ஆட்டம் எல்லாம் உன் கழுத்தில் இந்த தாலி இருக்கும் வரை தான் என மகா சொல்ல சீதா நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது, நான் ராமின் முதல் பொண்டாட்டி உங்களை மாதிரி இரண்டாவது பொண்டாட்டி கிடையாது என பதிலடி கொடுக்கிறாள்.


காணத்தவராதீர்கள்..


இப்படியான பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சீதா ராமன் தொடரில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை 7:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Kushboo:“நொண்டி சாக்கு கூறுகிறது தமிழக அரசு”தி கேரளா ஸ்டோரி தடை குறித்து குஷ்பூ காட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ