தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இது சீரியல் நேற்றைய எபிசோடில் சீதா சுபாஷை மிரட்டி கல்யாணத்துக்கு மகாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என கட்டளையிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளும் மகா


அர்ச்சனா மகாவிடம் வந்து சுபாஷ் உயிரை காப்பாற்றுவதற்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ என்று கெஞ்ச வேறு வழியில்லாமல் மகா ஒப்புக் கொள்கிறாள். பிறகு விஜய் தாத்தா ஓலை படித்து எல்லோரும் கையெழுத்திட மகா கையெழுத்து போடாமல் இருக்க சீதா சுபாஷை பார்த்து சைகையில் மிரட்ட அர்ச்சனாவும் சுபாஷூம் கெஞ்சி கையெழுத்து போட வைக்கின்றனர்.


அடுத்து மகா கோபப்பட்டு எழுந்து ரூமுக்குள் சென்று விட பிறகு ராம் வெளியே கிளம்பும்போது சுபாஷ் சேது ஆகியோர் எதிரே வந்து எதுக்கு எங்ககிட்ட பேச மாட்ற, நாங்க செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சாச்சு என்று சொல்ல நீங்க பெயில்ல தான் வந்திருக்கீங்க முழுசா வெளியே வாங்க அதன் பிறகு பேசுகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறான். 


இந்த கல்யாணம் நடக்காது: மீரா சவால்


அடுத்ததாக மகா சீதாவிடம் வந்து கல்யாண ஓலை எழுதிய பேப்பரை கிழித்து போட்டு இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்ல இது முத்தாரம்மா எழுதிய ஓலை இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சவால் விடுகிறாள். மீராவும் இந்த கல்யாணம் நடக்கும் என்று சொல்ல மகா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ஆனால் மாப்பிள்ளை சத்யன் கிடையாது என்று சொல்கிறாள். 



இருவரும் மாறி மாறி சவால் விட மகா கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறாள். அடுத்ததாக செக்யூரிட்டி ஓடி வந்து மகாவின் துப்பாக்கியை யாரோ உடைத்து போட்டு விட்டதாக சொல்லி கொடுக்க மகா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 


மேலும் படிக்க | ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்


அதை தொடர்ந்து சுபாஷ் சேதுபிடம் மீரா கல்யாணத்தை நிறுத்தனும்னா சிங் கெட்டப் போட்டுகிட்டு ரெடியாகி வா என்று சொல்லி கூப்பிடுகிறான். சொப்னா வீட்டுக்கு செல்ல பிளான் போடுகிறான். 



சத்யனை பார்த்து மகா அதிர்ச்சி


அடுத்ததாக சத்தியன் வீட்டுக்கு வந்து புடவைகளை எடுத்து வந்து காட்ட ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வரும் மகா காரை உள்ளே விட முடியாமல் இறங்கி வந்து பார்க்க சத்தியன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ