தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மகா வேலைக்காரி சமைத்ததாக நினைத்து சாப்பிட சீதா சமைத்த விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்தாள். 


சாப்பாட்டில் விஷமா? அச்சப்படும் அர்ச்சனா, மகா


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் மகாவும் அர்ச்சனாவும் சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டதாக பயந்து நடுங்க சீதா என்னையும் இப்படி தானே ஜெயிலில் வச்சி கொல்ல பார்த்தீங்க, அதனால் தான் நான் விஷம் வைத்தேன் என்று சொல்லி இன்னும் பயத்தை ஏற்படுத்துகிறாள். 


இதனால் இருவரும் பயந்து ஹாஸ்ப்பிட்டலுக்கு ஓட எதிராக ராம் வர அவன் மீது மோதி விடுகின்றனர். சீதா சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டதாக சொல்ல அவன் சீதாவை தேடி வந்து கேட்கும் போது அவ இவங்க பொய் சொல்றாங்க, என்னை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் பண்றாங்க, நான் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு காட்டுறேன்  என அதே சாப்பாட்டை சீதா சாப்பிட்டு கொண்டிருக்க மீரா சீதா மேல பொய் சொல்லி ட்ராமா போடுறாங்க, அதனால் தான் அவ அந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருக்கா என்று சொல்கிறாள்.



மேலும் படிக்க | ஓடிடியில் வெளியாகிறது ‘மாவீரன்’ படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?


மகாவுக்கு ஷாக் கொடுக்கும் சீதா


அடுத்து டாக்டர் வீட்டுக்கு வந்து மகாவையும் அர்ச்சனாவையும் பரிசோதனை செய்து விட்டு விஷமா? அப்படி எதுவும் இல்லையே என்று சொல்லி கிளம்ப டாக்டரை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்க வேண்டியது தான் என பிளான் போடுகின்றனர். பிறகு டாக்டர் கீழே இறங்கி வர ராம் என்னாச்சு என்று கேட்க விஷம் எதுவும் இல்ல, ஆனால் சீதா கலந்ததா சொல்றாங்க என்று சொல்ல ராம் கோபப்பட்டு மேலே வந்து உங்க மேல பெரிய மரியாதையை வச்சிருக்கேன், அதை கெடுத்துகாதீங்க என்று சத்தம் போட மகா ஷாக் ஆகிறாள். பிறகு அங்கு வரும் சீதா இப்போ விஷம் வைக்கல, ஆனால் ஒரு நாள் கண்டிப்பா வைப்பேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறாள்.



இதனை தொடர்ந்து லாயர் வீட்டுக்கு வர சீதா அவரை கூப்பிட்டு வைத்து மகாவின் திட்டத்தை கறக்க முயற்சி செய்ய அது முடியாமல் போகிறது, பிறகு மேலே வரும் லாயர் எல்லாம் ரெடி பண்ணியாச்சு, கூடிய சீக்கிரம் அவங்க வெளியே வந்துடுவாங்க என்று சொல்கிறார். மேலும் ராம், சீதாவையும் பிரிக்கவும் பிளான் இருக்கு என்று சொல்ல மகா நேரம் வரும் போது சொல்கிறேன் என்று கூறுகிறாள். 


சத்யன் வீட்டுக்கு செல்லும் சீதா


அடுத்து சீதா சத்யன் வீட்டுக்கு வந்து கல்யாண ஓலை எழுதுவது பற்றி பேச அவன் இதுல மகா கண்டிப்பா கையெழுத்து போடணும் என்று சொல்கிறான். மீரா சேது மற்றும் சுபாஷ் ரெண்டு பேரும் கையெழுத்து போடணும் என்று சொல்ல சீதா நான் நடத்தி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறாள். பிறகு சீதா துரையுடன் சொப்னா வீட்டிற்கு சென்று எங்க வீட்டில கல்யாணம் இருக்கு நீங்க கண்டிப்பா வரணும் என கூப்பிடுகிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | எகிறிய மார்க்கெட்! கவினுக்கு போட்டிப் போடும் இளம் நாயகிகள்: ஸ்டார் பட அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ