தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாவும் அர்ச்சனாவும் சீதாவை பார்க்க ஜெயிலுக்கு வந்து காத்திருந்த நிலையில் வெளிய வந்த சீதா மற்றும் மகா இருவரும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். 



மகாலட்சுமியை கடுப்பேற்றும் சீதா


மகாலட்சுமி எங்களை எதுக்கு வர சொன்ன என்று கேட்க சும்மா உங்கள பாத்து கண்ணடிக்க தான் என்று சீதா கண்ணடிக்க மகா கடுப்பாகிறாள். திரும்பவும் எதுக்காக வர சொன்ன என்று கேட்க உங்களைப் பார்க்கத்தான் என்று சொல்வது மட்டுமின்றி நீங்க நான் ஜெயில்ல இருக்கறதை பார்த்து சந்தோஷப்பட தான் வந்தீங்க என்று தெரியும் என சீதா சொல்கிறாள். 



மகாவும் ஆமாம் அதுக்காக தான் வந்தேன் என சந்தோஷமாக சொல்ல சீதா இன்னும் நாலே நாள் தான் நான் வெளியே இருப்பேன் நீங்க உள்ள இருப்பீங்க என்று அதிர்ச்சி கொடுக்க மகாலட்சுமி அப்படி என்ன பண்ண போற என்று கேட்க மேஜிக் பண்ண போறேன் நான் சொல்றது நிச்சயமா நடக்கும் என்று சொல்லி வெறுப்பேற்ற மகா கடுப்பாகி வீட்டுக்கு கிளம்புகிறாள். 


மேலும் படிக்க | ப்ரீத்தி செய்யும் சூழ்ச்சி.. வித்யா போடும் மாஸ்டர் பிளான் - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்


திட்டம் தீட்டும் மகாலட்சுமி


வீட்டுக்கு வந்த மகா சேது மற்றும் சுபாஷை அழைத்து பேச அப்போது துரை மற்றும் மீரா இருவரும் அங்கு வருகின்றனர். மகா துரையிடம் நீ இந்த வீட்டோட கெஸ்ட் நாங்க பேசுவதெல்லாம் கேட்கக்கூடாது என்று சொல்ல மீரா நான் இந்த வீட்டு ஆள் தானே, நான் இருக்கலாம் இல்ல என்று கேட்க முதல்ல உன்ன தான் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று மகா கோபப்படுகிறாள். 



சத்யனுக்கு ஷாக் கொடுக்கும் சீதா


சீதா ஏதாவது செய்வதற்கு முன்னாடி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டரை வரவைத்து சந்தித்து பேசுகின்றனர். மறு பக்கம் துரை மற்றும் மீரா காத்துக் கொண்டிருக்க சத்தியன் வீட்டுக்கு வர அவனிடம் உதவி கேட்க நான் எதுக்கு இந்த விஷயங்களில் தலையிடனும் எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறான். 


பிறகு அவன் சீதாவை பார்க்க வேண்டும் என துரையுடன் ஜெயிலுக்கு வர அவன் அங்கும் எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று கேட்க சீதா சம்பந்தம் இருக்கு என ஷாக் கொடுக்கிறாள். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் எடுக்கிறேன்! ஆனால் ஒரு கண்டிஷன்.. யோகிபாபுவை கலாய்த்த தோனி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ