நடிகர் விஜய் - சிம்ரன் கூட்டணியில் 1999 ஆம் ஆண்டு ரிலீஸான ’துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 23 ஆண்டுகளாகிறது. இந்தப் படத்தில் குட்டியாக விஜயும், கண் தெரியாத ருக்மணியாக சிம்ரனும் நடித்திருந்தனர். ருக்மணியை காதலிக்கும் குட்டி, அவருடனேயே இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருவார். இருவருக்கும் இணைப்பு பாலமாக இசை இருக்கும். பாடல் மூலம் உணர்வுகளை குட்டியும், ருக்மணியும் பகிர்ந்து கொண்டாலும், ருக்மணிக்கு குட்டி எப்படி இருப்பார்? என்று தெரியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | டோலிவுட் செல்லும் 'டாக்டர்' புகழ் ரெடின் கிங்ஸ்லி!


மருத்துவ சிகிச்சை மூலம் கண்பார்வை பெறும் ருக்மணி, படித்து கலெக்டராகிவிடுவார். அதன்பின் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக் கதை. அன்றைய காலகட்டங்களில் காதல் ஓவியமாக பார்க்கப்பட்ட இந்தப் படம் விஜய் - சிம்ரன் ஜோடிக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது. இந்தப் படத்துக்கும் பிறகு இருவரும் உதயா மற்றும் பிரியமானவளே ஆகிய திரைப்படங்களில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.



விஜயின் திரைப்பட வாழ்க்கையில் கேரியரை மாற்றியமைத்த படங்களுள் ஒன்றாக இருக்கும் ’துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் இன்றுடன் வெளியாகி 23 ஆண்டுகளாவதையொட்டி, ரசிகர்கள் இந்தப் படத்தின் பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை சிம்ரன், விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்தப் படத்தில் அவருடன் நடித்ததை என்றும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் எழிலுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 


ALSO READ | ஹிந்தியில் கொடி பறக்கவிடும் தனுஷ்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR