நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார், அன்று மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அதே நாளில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை கடிதம் மூலம் எழுதியுள்ள சிவகார்த்திகேயன். "எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி!​


அதற்கு, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம்) இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. “அமரன்” டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் "அமரன்" பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



அதே நாளில், எங்கள் "சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்" தயாரிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் “SK 23” பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் அன்புடன், சிவகார்த்திகேயன்" என்று கூறி உள்ளார்.


மேலும் படிக்க | மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன்.. அமரன் படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவி நெகிழ்ச்சி​


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ