இந்தியாவில், கொரிய மொழி தொடர்களுக்கும், அந்த மொழியின் சில பாடகர்களுக்கும் ரசிகர்கள் அதிகம். இதற்கு அடித்தளமாக, சில கொரிய காதல் தொடர்கள் அமைந்தன. ஆனால், முதன் முறையாக உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த த்ரில்லர் கொரிய தொடர், ஸ்குவிட் கேம். 2021ஆம் அண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இத்தொடருக்கு, பலத்த வரவேற்பு கிடைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்குவிட் கேம்:


தென் கொரியாவில், திறமைமிகு திரைப்பட கலைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்த தொடர், ஸ்குவிட் கேம். இதில் முக்கிய கதாப்பாத்திரமக லீ ஜுன் ஜே, பார்க் ஹே சோ, வி ஹாஜூன், ஹோயியோன் ஜங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 


வறுமையில் வாழும் 456 பேரை பிடித்து, அவர்களிடம் ஆசையை தூண்டி ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை சிறு குழந்தைகள் விளையாட வைப்பர். அந்த போட்டிகளில் தோற்றுப்போகிறவர்கள், கொத்துக்கொத்தாக இறந்து போவர். உதாரணத்திற்கு, ஒரு பொம்மையை நிற்க வைத்து, ‘ரெட் லைட் க்ரீன் லைட்’ விளையாட வைப்பர். அதில், அந்த பொம்மை திரும்பும் போது யார் அசைகின்றனரோ அவர்களை அந்த பொம்மை சென்சாரை வைத்து சுட்டுத்தள்ளிவிடும். இப்படி, எபிசோடுக்கு எபிசோட் மரண பீதியை கிளப்பும் இந்த தொடரில் மொத்தம் 9 எபிசோடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு எபிசோடும் 33 நிமிடங்கள் வரை இருக்கும். 


ஸ்குவிட் கேம் 2:


ஸ்குவிட் கேம் தொடர் 2021ஆம் ஆண்டு வெளியானதை தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசனுக்கான கதையுடன்தான் முதல் சீசன் முடிந்தது. பணத்தை கடைசியில் வென்று விட்டு வெளியேறும் கதாநாயகன், இந்த போட்டி நடைபெறுவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த போட்டிக்குள் நுழைய முடிவெடுப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.


ஃபர்ஸ்ட் லுக் வீடியோ:


ஸ்குவிட் கேம் சீசன் 2-வின் முதல் லுக் வெளியாகியுள்ளது. அதில், மீண்டும் போட்டிக்குள் நுழைய முடிவெடுக்கும் நாயகனை ஒருவர் “நீ இந்த முடிவை நினைத்து வருந்துவாய்..” என போனில் மிரட்ட, அதற்கு கதாநாயகன் “நான் உன்னை கண்டுபிடிப்பேன்..” என்று கூறுகிறார். இப்படி, இந்த முதல் லுக் வீடியோ நிறைவடைகிறது. 



மேலும் படிக்க | 2024 தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!


எப்போது ரிலீஸ்?


ஸ்குவிட் கேம் சீசன் 2, கடந்த 2022ஆம் ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு 2024ஆம் ஆண்டில் வெளியாகும் என கூறப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி, இத்தொடரின் இரண்டாவது சீசன் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கதை என்ன? 


ஸ்குவிட் கேமில், வறுமை கோட்டில் இருப்பவர்கள்தான் இந்த உயிருடன் விளையாடும் போட்டிகளில் கலந்து கொள்வது போல காட்சிகள் அமைந்திருக்கும். குதிரை பந்தையம் போல, அப்படி விளையாடுபவர்களின் மீது பணக்கார வர்க்கத்தினர் பணம் கட்டுவர். ஒவ்வொருவராக இறந்து போக, இந்த பணம் சேர்ந்து கொண்டே போகும். இறுதியில் ஒரே ஒருவர் உயிருடன் இருப்பார், அவருக்கு அந்த பணம் போய் சேரும். இது, அதிகார-பணக்கா வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களின் கையில் சிக்கிக்கொண்ட சாமானிய மக்களுக்குமான போராட்டமாக பார்க்கப்படுகிறது. முதலாளித்துவத்தையும் காண்பிக்கும் வகையில், இந்த கதை இருக்கும்.


மேலும் படிக்க | பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் 32 வயதில் மரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ