16 வயதினிலே படம் மூலம் பலருக்கும் பரீச்சியமான முகமாக மாறியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர், கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகுள் வெளியிட்ட டூடுல்:


பிரபலங்களின் பிறந்தநாளின் போது அல்லது ஏதேனும் முக்கியமான நாட்களின் போது கூகுள் நிறுவனம், அழகான டூடுள்களை வெளியிடுவது வழக்கம். அப்படி கூகுள் இன்று ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக கூகுள் ஒரு ஓவியத்தை வெளியிட்டுள்ளது. இதை மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் ஸ்ரீதேவி நடனமாடுவது போல டூடுல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | சாமி படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்-சோகத்தில் பிரபல நடிகர்..!


16 வயதினிலே மயிலு:


தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம், 16 வயதினிலே. இந்த படத்தில் மயிலு எனும் 16 வயது பெண் கதாப்பாத்திரத்தில் வந்து பலரையும் “யார்ரா இந்த பொண்ணு..” என்று கேட்க வைத்தவர், ஸ்ரீதேவி. இதற்கு முன்னரே இவர் பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்துள்ளார். 1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்தநாள். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். திரைத்துறையில் இருந்த 40 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இவர் 400 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார். ஸ்ரீதேவி, தனது திரை வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட பிறகு பாலிவுட் பக்கம் சென்றாலும் அவரை இன்னும் 16 வயதினிலே மயிலாக ரசிகர்கள் பலர் நினைவில் வைத்துள்ளனர். 


குடும்பம்:


ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். போனி கபூர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் ஸ்ரீதேவி அவரை திருமணம் செய்து கொண்டபோது பல விதமான சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், ஸ்ரீதேவி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் திறைக்கு முன்பு பேசாமல் இருந்தார். 


மர்மமான முறையில் மரணம்: 


நடிகை ஸ்ரீதேவி, தனது சகோதரியின் மகனின் திருமணத்திற்காக துபாய்க்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமண நிகழ்வு முடிந்த இரவு (பிப்ரவரி 24, 2018) தங்கியிருந்தார். அப்போது அவர் குளியளறையில் பாத் டப்பில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் பலர் இப்போது வரை உறுதியாக நம்புகின்றனர். ஆனால் காவல் துறையினர் இதை “எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழப்பு” எனக்கூறி வழக்கை முடித்து விட்டனர். 


சீரியல்:


ஸ்ரீதேவி படங்களில் மட்டுமே நடித்துள்ளதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர் மிகவும் பிரபலமான தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். ‘மாலினி ஐயர்’ என்ற அந்த தொடர், இந்தியில் ஒளிபரப்பாக்கப்பட்டது. இதில், வட இந்தியரை திருமணம் செய்து கொள்ளும் தமிழ் பெண்ணாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. இந்த தொடர், 2004ஆம் ஆண்டு வட இந்தியாவில் பிரபலமான தொடராக இருந்தது. இதில், ஸ்ரீதேவியின் கணவராக மகேஷ் தாகூர் நடித்திருப்பார். இந்த தொடரில் தமிழ் கலாச்சாரங்களுக்கும் பஞ்சாப் கலாச்சாரங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை காட்டியிருப்பர். இதில் நடித்ததற்காக ஸ்ரீதேவி பலரால் பாராட்டப்பட்டார். 


மேலும் படிக்க | 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணையும் நடிகை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ