கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அபிராமி தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகவும் பரிட்சயமானவர். மலையாள திரையுலகில் அறிமுகமானவர் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டில் அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் அவர் நடித்த மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல், அபிராமி நடித்த விருமாண்டி படம் 2004ஆம் ஆண்டில் வெளிவந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகள் இவர் வேறு படங்களில் நடிக்கவில்லை. 2014இல் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த இவர், 2015இல் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தில் நடித்தார். சமீபத்தில், மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், கடந்த மாதம் Zee5 ஓடிடியின் ஒரிஜினல் சீரிஸான ஒரு கோடை மர்டர் மிஸ்டரி சீரிஸிலும் நடித்திருந்தார். 


மேலும் படிக்க | இந்த தேதியில் ரஜினியின் ஜெயிலர் டப்பிங் ஆரம்பம்..விரைவில் முதல் சிங்கிள்


இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு போட்ட பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்த மகிழ்ச்சியான செய்தியை நேற்று அறிவித்தார். அபிராமியும் அவரது கணவர் ராகுலும் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் தங்கள் குழந்தையின் பெயர் 'கல்கி' என்றும் குறிப்பிட்டுள்ளனர். 


நடிகை அபிராமியின் பதிவு:



இதுகுறித்து நேற்று (மே 14) அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,"அன்புள்ள நண்பர்களே, ராகுலும் நானும் 'கல்கி' என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை இப்போது அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்தாண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம். அது எல்லா வகையிலும் எங்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.


இன்று நான் ஒரு புதிய தாயாக அன்னையர் தினத்தை கொண்டாடும் பாக்கியம் கிடைத்தது. நாங்கள் எங்கள் புதிய அத்தியாயத்தில் பயணிக்க உங்கள் ஆசீர்வாதங்களை நானும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும்  இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்" எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். தற்போது, அபிராமி மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிக்கும் 'கருடன்' படத்தில் நடிக்கிறார். இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அபிராமியின் பதிவை அடுத்து, அவரது ரசிகர்கள், சக நடிகர்கள், நலவிரும்பிகள், நண்பர்கள் ஆகியோர் கமெண்டில் தம்பதியருக்கு வாழ்த்துகளை அள்ளி வீசினர் எனலாம். "வாவ். மகிழ்ச்சியான தாய்... உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்" என்று நடிகை ஸ்வேதா மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.


"அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்பே" என நடிகரும், நடனக் கலைஞருமான திவ்யா உன்னி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஜோடி தங்கள் மகளுக்குத் தேர்ந்தெடுத்த அழகான பெயரைப் பற்றி ஒரு ரசிகர் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஆஹா, என்ன ஒரு அழகான பெயர் 'கல்கி'. மகிழ்ச்சியான அன்னையர் தினம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | Keerthy Suresh: “தாய் இல்லாமல் நான் இல்லை” வித்தியாசமாக மதர்ஸ் டே வாழ்த்து சொன்ன கீர்த்தி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ