இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் அடையாளப்பட்டார். அதன் பிறகு அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவானது. சமீபத்தில் பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் அப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் பிரபாஸின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதாக தற்போது டோலிவுட் வட்அடாரத்தில் பேசப்படுகிறது. சாஹோ படத்தின் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகளின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்தச் சமயத்திலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு பிரபாஸுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால் கைவசம் வரிசையாக படங்கள் இருந்ததால் அப்போது அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை எனவும் தெரிகிறது.


மேலும் படிக்க | மறைந்தாலும் மாஸ் காட்டும் புனித் - இவரது கடைசி படம் இத்தனை கோடி வசூலா?



இனியும் அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தால் காயத்தின் நிலைமை தீவிரமாகுமென உணர்ந்ததால் தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டால் மூன்று மாதங்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் அவர் தற்போது நடித்துவரும், ப்ராஜெக்ட் கே மற்றும் சலார் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் படிக்க | தளபதி 66 படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR