விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி அடுத்ததாக அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்தை நினைத்தால் பதறுகிறது என அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் கூறிக்கொண்டிருக்கின்றனர். 



இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று வெளியானதையொட்டி அவர்கள் திருப்பதி சென்றதாக கூறப்படுகிறது.இதுதொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.



இதற்கிடையே காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின்போது நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் பிரிய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


 



தற்போது இருவரும் ஒன்றாக திருப்பதி சென்ற புகைப்படத்தை பகிர்ந்திருப்பதன் மூலம் நாங்கள் இருவரும் பிரியவில்லை என்பதை உணர்த்தியிருப்பதாக நயன்தாரா ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கூறிவருகின்றனர்.


மேலும் படிக்க | 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை மொபைலிலேயே பார்ப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR