தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். சமீபத்தில் சூர்யாவின் (Suriya) பிறந்தநாள் அன்று எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் First Look, Second Look, மற்றும் third Look வெளியாகியிருந்தது.


ALSO READ | சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ


அத்துடன் இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்திற்கு போட்டியாக அருண் விஜய் களம் இரன்கி உள்ளார். அதன்படி அருண் விஜய்யின் ‘யானை’ படம் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யானை படத்தை ஹரி இயக்கி உள்ளார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ALSO READ | விஜய் சூர்யா திடீர் சந்திப்பு – நடந்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR